கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 15. Februar 2011

ரவை அல்வா

"செய்வதிற்கு இலகுவான சுத்தமான சுவையான
இனிப்பான அல்வாவே ரவை அல்வாவாகும்.
அத்துடன் இதில் கொழுப்புசத்து,சீனிசத்து,
மினரல்சத்து போன்ற பலசத்துக்கள் அடங்கியது
அத்துடன் சிறுவர் முதல் வயதானவரை
விரும்பியும் சாப்பிடுவதிற்கு இலகுவான ஒரு
உணவாவாகும்".


தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
நெய் -   1 கப்
சீனி(சக்கரை) - 2 கப்
கயு(முந்திரிப்பருப்பு) - விரும்பியளவு
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை 
(1)ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதனுடன்
    அரை கப் தண்ணீர் விட்டு சிறிதளவு நேரம்
    ஊறவிடவும்.

(2)ரவை நன்றாக ஊறிய பின்னர் அதிலுள்ள நீரை
    வடித்துவிடவும்.

(3)அடுப்பில் அடிகனமான பாத்திரத்தினை  வைத்து
     அதில் சீனி(இந்தியன் சக்கரையை) போட்டு அதன்
     மேல் தண்ணீர் விட்டு(சீனி(சக்கரை)யை விட
     தண்ணீர் ஓரளவு அதிகமாக இருக்கவேண்டும்)
     பாகாக   காச்சவும்.

(4)பாகாக காச்சிய பின்னர் அதனுடன் ஊறவைத்து
    வடித்த ரவையை போட்டு நன்றாக கிளறி அவிய
    (வேக) விடவும்  .

(5)ரவை ஓரளவு வெந்த பின்னர் அதனுடன் நெய்யை
    சிறிது சிறிதாக சேர்த்து கிளறி அவிய(வேக)விடவும்.

(6)ரவை அவிந்து(வெந்து)அல்வா பதமாக வந்த பின்னர்
    அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.

(7)அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கிய பின்னர்
     பாத்திரத்தில் இருந்து அல்வாவை எடுத்த ஒரு
     சிறிதளவு நெய் பூசிய தட்டில் போட்டு ஓரளவு
     பரவாலாக பரப்பவும்.

(8)பரப்பியபின்னர் அடுப்பில் தாட்சி(வாணலி)யை
    வைத்து சூடாக்கி அதில் சிறிதளவு நெய்யை
    விட்டு சூடாக்கி அதில் கயுவை(முந்திரியப்
    பருப்பை)போட்டு பொரிக்கவும்(வறுக்கவும்).

(9)பொரித்த(வறுத்த)கயுவை (முந்திரியப்பருப்பை)
    தட்டில் பரப்பி வைத்திருக்கும் அல்வாவின் மேல்
    போட்டு நன்றாக அலங்கரிக்கவும்.

(10)அலங்கரித்த பின்னர் சுத்தமான சுவையான ரவை
     அல்வா தயாராகிவிடும்.

(11 )சுத்தமான சுவையான ரவை அல்வா தயாராகிய
      பின்னர் அதனை தேவையானளவு துண்டுகளாக
      வெட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும் .


கவனிக்கவேண்டியது 
(1)அல்வாபதமாக அவிய(வேக)விடவும்.
(2)சக்கரை நோயாளர்,இதய நோயாளர்
    ஆகியோர்   வைத்தியரின் ஆலோசனைப்படி
    சாப்பிடவும்.     

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.