கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 28. Dezember 2010

கணவாய் கறி-1

தேவையான பொருட்கள் 
சுத்தமாக்கிய கணவாய்- 1  கிலோகிராம்
மிளகாய்த்தூள் - தேவையானளவு
உப்பு -தேவையானளவு
பொடிபொடியாகநறுக்கியவெங்காயம் -1
பெருஞ்சீரகம்(சோம்பு) -கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பொடிபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
பொடிபொடியாக நறுக்கியஉள்ளி(பூண்டு)-6
பால் - தேவையானளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
தேசிக்காய்ப்புளி - தேவையானளவு
எண்ணெய்- தேவையானளவு


செய்முறை 
சுத்தமாக்கி கழுவிய கணவாயை
விரும்பியளவில் ஓரளவு சிறிய
துண்டுகளாக வெட்டவும்

வெட்டியவற்றை ஒரு பாத்திரத்தில்
போடவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து சூடாக்கவும்

தாட்சி சூடானதும் அதில் சிறிதளவு
எண்ணையை விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு
போட்டு பொரிய விடவும்

அதன் பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),பொடிபொடியாகநறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
ஓரளவு பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்த பின்னர் அதனுடன்
பொடிபொடியாக நறுக்கிய பச்சை
மிளகாயை போட்டு தாளிக்கவும் .

தாளித்த பின்னர் தாளித்தவற்றை
ஒரு பாத்திரத்தில் எடுத்து
வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் உள்ள
தாட்சியில் சுத்தப்படுத்தி கழுவி
வெட்டிய கணவாயை போடவும்

அதன்பின்னர் கணவாய் போட்ட
தாட்சியை முடி அவியவிடவும்

கணவாயில் உள்ள தண்ணீர்
எல்லாம் வற்றி கணவாய்
ஒரளவு அவிந்த  பின்னர்
அதனுடன்மிளகாய்த்தூள்,
பொடிபொடியாக நறுக்கிய
உள்ளி(பூண்டு) சிறிதளவு
எண்ணெய் ஆகியவற்றை
போட்டு பிரட்டி மிளகாய்த்
தூளின் பச்சை வாடையில்
லாமல்  போகும்வரை பொரிய
விடவும்

பொரிந்த  பின்னர் உப்பு,
ஆகியவற்றை போட்டு அவிய
விடவும்

அவிந்த பின்னர் அதனுடன் பாலை
விட்டு கொதிக்கவிடவும்

கொதித்தபின்னர் அதனுடன்
கறிவேப்பிலையை போட்டு
சிறிது நேரம் அவிய விட்டு
அடுப்பில் இருந்து இறக்கவும் .

அதன் பின்னர் சுத்தமான
சுவையான சத்தான கணவாய்
கறி தயாராகிவிடும்

பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன்
சுத்தமான சுவையான சத்தான
கணவாய் கறியை வைத்து
பரிமாறாவும் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.