கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 21. April 2011

குலாப்ஜாமூன்

குலாப்ஜாமூன் மிகமிக சுவையான இனிப்பு
ஆகும். இனிப்பு பிரியர்களுக்கு மிகமிக
பிடித்த இனிப்பு வகை இதுவாகும். அத்துடன்
 இதில் பல சத்துகள் அடங்கியுள்ளது. 


தேவையான பொருட்கள் 
கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
டின் பால் (கன்டென்ஸ்டு மில்க்) - அரை டின்
சீனி (சர்க்கரை) - 250 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
அப்பச்சோடா - அரை தேக்கரண்டி
வனிலா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - அரை போத்தல்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா)
அப்பச்சோடா உப்பு, நெய், வனிலா, டின்பால்
(கன்டென்ஸ்டு மில்க்) ஆகியவற்றை சேர்த்து
நன்றாக குழைக்கவும்.

குழைத்த பின்பு இந்த பாத்திரத்தை ஒரு
மணித்தியாலம் நன்றாக மூடிவைக்கவும்.

ஒரு மணித்தியாலத்தின் பின்பு பாத்திரத்தை
 திறந்து முதலில் குழைத்து வைத்துள்ள
மாவை மறுபடியும் குழைக்கவும்.

பின்பு குழைத்து வைத்துள்ள எல்லா மாவை
யும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு
நன்றாக கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்தபின்பு அதில் உருட்டி
வைத்திருக்கும் சிறிய சிறிய உருண்டைகள்
முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு
பொன்னிறமாக பொரிக்கவும்.

உருண்டைகள் யாவும் பொரித்த பின்பு தாட்சியை
(வாணலியை) அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
சூடாக்கி அதில் சீனி(சர்க்கரை)யை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு பாகு பதத்தில்
காய்ச்சவும்.

பாகு பதத்தில் காய்ச்சிய பின்பு அப்பாத்திரத்தை
அடுப்பிலிருந்து இறக்கவும்.

பிறகு பாகு உள்ள பாத்திரத்தில் பொரித்து
வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு
பாத்திரத்தை (1 - 2)மணித்தியாலம் நன்றாக
மூடிவைக்கவும்.

(1 - 2)மணித்தியாலத்தின் பின்பு சுவையான
சத்தான குலாப்ஜாமுன் தயாராகிவிடும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தேவையான
குலாப்ஜாமூனை வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரை நோயுள்ளவர்கள், இருதய
நோயுள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள்
சீனி(சர்க்கரை)யை போட்டு அதனுடன்
 தண்ணீர் விட்டு பாகுபதத்தில் காய்ச்சவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.