கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 25. Dezember 2012

Montag, 24. Dezember 2012

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்,


Samstag, 1. Dezember 2012

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 30. November 2012

கருணை கிழங்கு பக்கோடா


கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள்
இருக்கின்றன. கருணை கிழங்கை
வழக்கமான வறுவல் போல் செய்யாம
ல், இப்படி பக்கோடாக்களாக செய்தால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
 அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை
 கருணை கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
 அரிசி மாவு - 1 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
 பூண்டு - 5
 சீரகம் - 1 ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 உப்பு,
எண்ணெய் - தேவைகேற்ப

 செய்முறை

கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக
 நறுக்கிகொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள்
தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.

வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

 சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு
மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு,
அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து
பேசியாவும். (இந்த கலவையில் நிறைய
தண்ணீர் சேர்க்க கூடாது.)

 தயாரித்த கலவையுடன் வேகவைத்த கருணை
கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து
எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறு
மொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு
பக்கோடா தயார்

இக்குறிப்பை வழங்கியவர்
திரு துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 29. November 2012

சோளக்கட்லெட்

தேவையானபொருட்கள் 
பச்சையான சோளமுத்து- 1 கப், 
கருப்பு கொண்டைக் கடலை - 1 கப், 
பொடியாகவெட்டியவெங்காயம்-தேவையானளவு
பச்சை மிளகாய்-தேவையானளவு
இஞ்சி,-தேவையானளவு
கொத்தமல்லி - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
 உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
கராம்பு -2.

 செய்முறை 
மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் பச்சையான
சோளமுத்துக்களை போட்டு கரகரப்பாக
 அரைக்கவும்.

 அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு
 வைக்கவும்

 அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கொண்டைக்
 கடலையை போட்டு ஊற வைக்கவும்.

 பின்னர் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில்
 கொண்டைக் கடலை,கராம்பு, காய்ந்த மிளகாய்
ஆகியவற்றை போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

 அரைத்த பின்னர் அதனை எடுத்து அரைத்த
 சோளமுத்துக்கள் போட்ட பாத்திரத்தில் போடவும்.

 பின்னர் இவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை போடவும்.

 அதன் பின்பு எல்லாவற்றையும் நன்றாக சேர்த்துப்
பிசையவும்.

 பிசைந்த பின்னர் சின்னச் சின்ன கட்லெட்டுகளாக
செய்யவும் .

 சின்னச் சின்ன கட்லெட்டுகளாக செய்த பின்னர்
அதனை சூடான தோசைக்கல்லின் மேல்வைத்து,
எண்ணெய் விட்டு, இரண்டு பக்கங்களும்
வேகவிடவும்.

 வெந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
 சோளக்கட்லெட் தயாராகிவிடும்

 அதன் பின்னர் ஒரு தட்டில் கட்லெற் சிலவற்றை
 வைத்து அதனுடன் சட்னி சம்பல்அல்லது சோஸ்
வைத்து பரிமாறவும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 28. November 2012

கொண்டைக்கடலை பாயாசம்


தேவையான பொருட்கள் 

கொண்டைக்கடலை - 1 கப்
சீனி - 2 கப்
பால் - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்(உடைத்தது) - 5
கயூ (முந்திரிப்பருப்பு) - 10

 செய்முறை
உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)
கொடைக்கடலை தண்ணீர் ஆகியவற்றை
சேர்த்து மெதுமையாக அரைத்துக் கொள்ளவும்

 அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து
அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை
போட்டு பொரிக்கவும்

அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)
இறக்கிய  பின்னர் பொரித்தவற்றை வானொலி
யில்(தாட்சியில்) இருந்து எடுத்து ஒரு தட்டில்
 போட்டு ஆறவிடவும்

 அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்
தை வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை
பால் சேர்த்து காச்சவும். பால் பொங்கி வந்த
பின்பு அதனுடன் சீனியை (சக்கரையை)சேர்த்து
காச்சவும்

 இவை யாவும் கொதித்த பின்பு உடைத்த
ஏலக்காய்,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்
பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்
காமல் நன்றாக கிளறவும்

 அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை
இறக்கவும்.

 இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்து
மிக்க கொண்டைக்கடலை பாயாசம்தயாராகி
விடும்.

Donnerstag, 22. November 2012

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 20. November 2012

Freitag, 16. November 2012

கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருட்கள்

எண்ணெயில் பொறித்து
அரைக்க

துவரம் பருப்பு - 1தேக்கரண்டி
பச்சைஅரிசி -1தேக்கரண்டி
 மிளகு -1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
ள்ளி (பூண்டு) - 1/2தேக்கரண்டி
இஞ்சி-1/2தேக்கரண்டி
வரமிளகாய் -6 
கருவேப்பிலை -1கைப்பிடி

தனியாக வறுக்க 

திருவிய தேங்காய் -1கப்
வெட்டிய வெங்காயம் -1 
வெட்டிய தக்காளி-1 
புளிகரைசல் -1கப் 

செய்முறை     

அடுப்பில் தாட்சியை வைத்து 
அதில் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய சூடானதும் அதில் 
வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் 
தக்காளியை சேர்க்கவும் . 

தக்காளி வதங்கியவுடன் 
புளிகரைசலை அரைத்த 
மசாலாவுடன் சேர்த்து
அதில் ஊற்றவும்.

அதன் பின்னர் அதனுடன் 
உப்பு மஞ்சள்தூள் ஆகியற்றை 
போடவும் நன்றாக கொதிக்க
விடவும் 

நன்றாக கொதித்து எண்ணெய் 
கறியை விட்டு பிரிந்ததும் 
தாட்சியை அடுப்பில் இருந்து 
இறக்கவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்



Mittwoch, 14. November 2012

புதன்கிழமைவாழ்த்துக்கள்


Dienstag, 13. November 2012

செவ்வாய்கிழமைவாழ்த்துக்கள்


Montag, 12. November 2012

திங்கள்கிழமைவாழ்த்துக்கள்


Sonntag, 11. November 2012

முந்திரி முறுக்கு

முந்திரி முறுக்கு சுத்தமானது மிகமிக
சுவையானது. செய்வதற்கும் மிகவும்
இலகுவானது.இதில் இலிப்பிட்டு
கார்போவைதரேட்நார்சத்து கொழுப்பு
சத்து புரதசத்து தியமின்சத்து ரைப்போ
ஃப்ளேவின்சத்து அயோடின்சத்து விற்ற
மின்சத்து  B3 B5 B6 B9 C, கல்சியம்சத்து
மக்னீஷியம்சத்து பொஸ்பரஸ்சத்து
இரும்புசத்து பொட்டாஷியம் போன்ற
பல சத்துகள் காணப்படுகிறது. முந்திரி
(cashew)யின் சுவையை எல்லோரும்
விரும்பி உண்பார்கள். ஆகவே இதன் 
சுவையையும், இதில் காணப்படும் சத்து
களையும் அறிய முந்திரி முறுக்கை செய்து 
பார்த்து சாப்பிட்டு அறியவும்.

தேவையான பொருட்கள் 
(ஊறிய, அரைத்த)முந்திரிவிழுது - அரை கப்
அரிசிமா - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு (விரும்பினால்)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் (ஊறி, அரைத்த)முந்திரிவிழுது
அரிசிமா, நெய், எள், உப்பு, பெருஞ்சீரகம்(சோம்பு)
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

மாவை கலக்கிய பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகிய பின்பு முறுக்கு உரலில்
முறுக்கு அச்சு போடவும்.

பின்பு கலந்து வைத்திருக்கும் மாவில் சிறிதளவு
எடுத்து அதனை அச்சு போட்ட முறுக்கு உரலில்
போடவும்.

பின்பு சூடாகிய எண்ணெயில் அச்சில் போட்ட
மாவினை முறுக்கு வடிவில் பிழியவும்.

எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்த மாவினை
போட்ட பின்பு அதனை பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.

பொன்னிறமாக பொரித்த முறுக்கினை ஒரு
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இப்படியே மிகுதியாக உள்ள எல்லா மாவினையும்
பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.

இப்போது சுவையான சத்தான முந்திரிமுறுக்கு
தயாராகி விட்டது.

ஒரு தட்டில் சுவையான சத்தான முந்திரி முறுக்கு
சிலவற்றை வைத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள்- 
நன்றாக ஊறிய அரைத்த முந்திரி விழுது
எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

எச்சரிக்கை - 
முந்திரி அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

புளிச்சாதம்

இப்புளிச்சாதத்தில் காபோவைதரேற்று 
கொழுப்புச்சத்து, உயிர்சத்து,புரதச்சத்து,
மினரல் போன்ற பல சத்துக்கள்  அடங்கி
உள்ளது. அத்துடன் சுத்தமானதும் சுவை
யானதும் ஆகும். ஆகவே இதன் சுவையை 
அறிய விரும்பினால் இதனை செய்து 
சாப்பிட்டு அறியலாம் . 

தேவையான பொருட்கள்
பச்சை அரிசி அல்லது சம்பா அரிசி - 1 சுண்டு
துப்பரவாக்கிய கடலைப்பருப்பு - 50கிராம்
பழப்புளி - பாக்களவு 
சிறிது சிறிதாக வெட்டிய செத்தமிளகாய் - 5 
சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1            
சிறிது சிறிதாக வெட்டிய உருளைகிழங்கு - 1 
மாஜரீன், பட்டர்அல்லது நெய் - தேவையானளவு
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி 
மிளகுத்தூள் -1 தேக்கரண்டி 
கடுகு -சிறிதளவு 
பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு     
கறிவேப்பிலை - தேவையானளவு 
உப்பு - தேவையானளவு 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை


ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு நன்றாக ஊறவிடவும்,

அதன் பின்னர் அடுபில் பானையை வைத்து அல்லது ரைஸ்குக்கரின் சட்டியில்  அரிசி ,கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு அவியவிடவும்.

இவையாவும் நன்றாக அவிந்ததும் கஞ்சியை வடித்துவிடவும் அல்லது ஈரப்பதன் நீங்க ஊறவிடவும்.

அதன் பின்னர் அடுப்பில் இருந்து அல்லது ரைஸ் குக்கரில் இருந்து இப்பாத்திரத்தினை எடுத்து இறக்கிவைக்கவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு ஆறவிடவும்.

பின்னர்  சிறிது சிறிதாக வெட்டிய உருளைக்கிழங்கினை ஒரு பாத்திரத்தில் போடவும்.

போட்ட பின்னர் அப்பாத்திரத்தில் உப்பு , மிளகாய்த்தூள் போட்டு பிரட்டவும்.

பிரட்டிய பின்னர் அடுப்பில் ஒரு தாட்சியை வைத்து அதில் எண்ணையை விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடான பின்னர் சிறிது சிறிதாக வெட்டி பிரட்டிய உருளைக் கிழங்கினை போட்டு மொருக பொரிக்கவும்.

பொரித்த பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

போட்டு வைத்த பின்னர் ஒரு தம்ளரில் பழப்புளி, தண்ணீர் ஆகியவற்றை போட்டு கரைக்கவும் (அரைத்தம்ளர் அளவு கரைசல்)

பின்னர் அடுபில் தாச்சியை வைத்து அதில் மாஜரீன் அல்லது நெய்யை விட்டு அதில் கடுகை போட்டு வெடிக்கவிடவும்.

கடுகு வெடித்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டிய செத்தமிளகாய் ,சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதங்கவிடவும்.

அவை ஓரளவு வதங்கிய பின்பு  பெருஞ்சீரகம் (சோம்பு), கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகுதூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

அவையாவும் நன்றாக வதங்கிய பின்னர் அதனுடன் அரை தம்ளர் புளிக்கரைசலை விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

கொதிக்கவிட்ட பின்னர்  இவற்றுடன் உப்பை சேர்க்கவும்.

சேர்த்த பின்னர் அவற்றை நன்றாக கொதிக்கவிடவும்.

இவை யாவும் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது இதில் ஆறவைத்திருக்கும் சோறு (சாதம்) பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கினையும் போட்டு நன்றாக கிளரி விடவும்.

இவையாவும் நன்றாக சேர்ந்த பின்னர்  அதில் உள்ள தண்ணீரை வற்ற விடவும்.

அதில் உள்ள தண்ணீர் யாவும் வற்றிய பின்னர் இப்பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு நன்றாக ஆறவிடவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான புளிச்சாதம் தாயாராகிவிடும்.

சுத்தமான சுவையான சத்தான புளிச்சாதம் தயாரான பின்னர் ஒரு தட்டில்  தேவையானளவு இப் புளிசாததை வைத்து  அதனுடன் சிறிதளவு இஞ்சி சம்பலை அல்லது ஏதாவது இறைச்சி கறியை வைத்து பறிமாறவும்.

இக்குறிப்பினை எமக்கு வழங்கியவர் - 

திருமதி சுமனா பவானந் (ஜேர்மனி)

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 9. November 2012

சனிக்கிழமை வாழ்த்துக்கள்



Freitag, 2. November 2012

காளான் - சிக்கன் தொக்கு

 தேவையான பொருட்கள்

 கோழி - 1/2 கிலோ
குடை மிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பற்கள்

 செய்முறை

கோழித் துண்டுகளைச் சுத்தம் 
செய்துவேக வைத்துக் கொள்ளவும்
.
சாம்பார் வெங்காயத்தை உரித்து 
கீறிக்கொள்ளவும்,

பச்சை மிளகாயை இடித்துக் 
கொள்ளவும்.

இஞ்சி,உள்ளி (பூண்டு) தட்டி 
எடுத்துக் கொள்ளவும்.

ஒரு தாட்சியில் எண்ணெய் 
விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில்  
வெங்காயத்தை போட்டு 
நன்றாக வதக்கவும்

பின் நறுக்கிய குடைமிளகாய், 
காளான்கோழி ஆகியவற்றை 
போட்டு வதக்கவும்.

தொடர்ந்து தட்டிய மிளகாய், 
இஞ்சி பூண்டு ஆகியவற்றை 
சேர்த்து வதக்கவும்

இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு 
நீர் சேர்த்து,பின்னர் போதுமான 
அளவு உப்பு சேர்த்துக்கிளறவும்.

நன்றாக வெந்தவுடன் மிளகுத்தூள் 
சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Donnerstag, 1. November 2012

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

Dienstag, 30. Oktober 2012

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

வாழைக்காய், மீன் வறுவல்


தேவையான பொருட்கள்   

அவித்த வாழைக்காய் - 2 
வரமிளகாய்-4
பெருஞ்சீரகம் (சோம்பு)-2 தேக்கரண்டி 
மிகச்சிறிதாக வெட்டிய இஞ்சி -1 தேக்கரண்டி
மிகச்சிறிதாக வெட்டிய உள்ளி (பூண்டு) -1 தேக்கரண்டி
மிகச்சிறிதாக வெட்டிய வெங்காயம் -2 தேக்கரண்டி
தேங்காய் பூ-2 தேக்கரண்டி 

 செய்முறை:   

கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் 
வரமிளகாய்பெருஞ்சீரகம் (சோம்பு)
மிகச்சிறிதாக வெட்டிய இஞ்சி மிகச்
சிறிதாக வெட்டிய உள்ளி (பூண்டு) 
மிகச்சிறிதாக வெட்டிய வெங்காயம் 
தேங்காய் பூ ஆகியவற்றை போட்டு 
நன்றாக  அரைத்துக் கொள்ளவும். 

 ஒரு நான் ஸ்டிக் பேனில் சிறிதளவு 
எண்ணெய் விட்டு வாழைக்காயைத்
 தோல் உரித்து, வட்டமாகக் கட் 
செய்த பொறிக்கவும். 

 பாதி ரோஸ்ட்டானவுடன் அரைத்து 
வைத்த மசாலாவைப் போடவும். 
தண்ணீர் சேர்க்க வேண்டாம். 

உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். 
 நன்றாக பொறிந்தவுடன் இறக்கவும். 

 இதே போல் மீனையும் பொறிக்கலாம்

Donnerstag, 18. Oktober 2012

கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா


தேவையான பொருள்கள் 
வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப்
கடலை மா-1/2கப்
அரிசிமா-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
இஞ்சி,விழுது-1/2தேக்கரண்டி
பூண்டு விழுது-1/2தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில்  வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை) ,கடலை மா,உப்பு,
இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி
மா ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

கலந்தவற்றை 5நிமிடம் வைக்கவும்

அதன்  பிறகு அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடானதும் அதில் கலந்து
வைத்துள்ளவற்றில் சிறிதளவை
கையில் எடுத்து சூடான எண்ணெய்யில்
 தூவி விடவும்

அதன் பின்னர் தீயை குறைவாக வைத்து
பொன்னிறமாக நன்கு பொரிய விடவும்

பொன்னிறமானக பொரிந்ததும் அடுப்பில்
உள்ள தாட்சியில் இருந்து எடுத்து வேறு
ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறவிடவும்

சூடு ஆறியதும் சுத்தமான சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா
தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)
பக்கோடாவை போட்டு பறிமாறவும்

இட்லி மஞ்சூரியன்

தேவையானபொருட்கள்
இட்லி - 6
தக்காளி சோஸ் - 1 கப்
ரெட் சில்லி சாஸ் - 1/4கப்
பொடியாக நறுக்கியஉள்ளி - 3 பல்
பொடியாக நறுக்கியவெங்காயத்தாள் - 1/2கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செயல்முறை

ஒரு தட்டில் இட்லிகளை சிறிய துண்டு
களாக வெட்டிவைக்கவும்.

பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது 
தண்ணீர் விட்டு அதனுடன் சோள மாவை 
போட்டு கரைத்து வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க
விடவும் 

எண்ணெய் கொதித்ததும் அதில் நறுக்கின 
இட்லி துண்டுகளை போட்டு பொரித்து
எடுக்கவும்.

பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு
பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து 
அதில்  ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்  

எண்ணெய் சூடானதும் அதனுள் பொடியாக
நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின
வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு
வதக்கவும்.

பின்னர் அதனுடன் தக்காளி சோஸ், ரெட்
சில்லி சாஸ் ஆகியவற்றை விட்டு கிளறவும்.

பிறகு அவற்றுடன் சோளமாவு கரைசல், சோயா
சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

கிளறிய கலவை கொஞ்சம் கெட்டியானதும்
அதனுள் பொரித்து வைத்த இட்லி
துண்டுகளை போட்டு கிளறவும்.

 அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும் 

பின்னர் ஒரு தட்டில்  சுத்தமான சுவையான 
சத்தான இட்லி மஞ்சூரியன் போட்டு அதன் 
மேல் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு இட்லியை பொரிக்காமல்  வதக்கியும் 
சேர்க்கலாம்.

Mittwoch, 17. Oktober 2012

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

Donnerstag, 11. Oktober 2012

கச்சான் (வேர்கடலை) பக்கோடா


தேவையான பொருள்கள் 
 வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப் 
கடலை மா-1/2கப் 
அரிசிமா-4தேக்கரண்டி 
மிளகாய் தூள்-1தேக்கரண்டி 
இஞ்சிவிழுது-1/2தேக்கரண்டி 
உள்ளி(பூண்டு) விழுது-1/2தேக்கரண்டி 
உப்பு-தேவையானளவு 
எண்ணெய்-தேவையானளவு 

 செய்முறை 
ஒரு பாத்திரத்தில் வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை),கடலை மா,உப்பு,
இஞ்சிவிழுது,உள்ளி(பூண்டு) விழுது,
மிளகாய் தூள்,அரிசி மா ஆகியவற்றை 
போடவும்.

போட்ட பின்னர் எல்லாவற்றையும் 
நன்றாக கலக்கவும் 

கலந்த பின்னர் 5-10 நிமிடம் மூடி 
வைக்கவும்

அதன் பின்னர் ஒரு வாணலியினை 
அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதிற்கு 
தேவையானளவு எண்ணெய் விடவும் 

எண்ணெயை சூடாக்கவும்.

எண்ணெய் சூடான பின்னர் அதில் 
சிறிதளவு கலந்து வைத்தவற்றை 
போடவும்

அதன் பின்னர் அடுப்பின் நெருப்பு (தீ)
எரியும் அளவை குறைக்கவும். 

எண்ணெய்யில் போட்டவற்றை 
பொன்னிறமாக பொரிக்கவும்

பொன்னிறமாக பொரிந்ததும் 
அவற்றை எண்ணெய் வடித்து 
எடுத்து ஒரு பாத்திரத்தில் 
போடவும்

போட்ட பின்னர் அதனை சூடு 
ஆறவிடவும்

இதனை போல எல்லாவற்றையும் 
பொரித்து எடுக்கவும் 

எல்லாவற்றையும் பொரித்து எடுத்து 
ஒரு பாத்திரத்தில் போட்ட பின்னர் 
சுத்தமான சுவையான கச்சான் 
(வேர்கடலை) பக்கோடா தயாராகி
விடும்

கச்சான் (வேர்கடலை) பக்கோடா 
தயாரான பின்னர் ஒரு தட்டில் 
தேவையானளவு பகோடாவினை 
வைத்து பறிமாறவும்

Samstag, 6. Oktober 2012

கறிவேப்பிலை துவையல்-2



தேவையான பொருட்கள்: 
கறிவேப்பிலை - 1கப்,
சின்ன வெங்காயம் - 2,
பச்சை மிளகாய்- 3,
புளி - சிறிதளவு,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
உப்பு - தேவையானளவு
எண்ணெய் -2 தேக்கரண்டி

செய்முறை: 
அடுப்பில் தாட்சியினை வைத்து சூடாக்கவும்

அதன் பின்னர் அதில்  ஒரு தேக்கரண்டி
எண்ணெய் விட்டு அதனுடன் கறிவேப்பிலை,
பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்
ஆகியவற்றை போட்டு வதக்கவும்

வதக்கிய பின்னர் அதனை அடுப்பிலிருந்து
எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்

இவை யாவும் ஆறிய பின் வதக்கிய
எல்லாவற்றையும் மிக்ஸியில் போடவும்

பின்னர் அதனுடன் புளி, தேங்காய்ப்பூ, உப்பு ,
சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து
கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தவற்றை எடுத்து ஒரு தட்டில் போடவும்

பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்

எண்ணெய்  சூடானதும் அதில் கடுகை போட்டு
தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதனை அரைத்தவற்றுடன்
போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் சுத்தமான சுவையான
கறிவேப்பிலை துவையல் தயாராகிவிடும்

ஒரு தட்டில் ரசம், சாம்பார்  சாதம் இட்லி புட்டு
பாண் இடியப்பம் தோசை இவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் சுத்தமான சுவையான
கறிவேப்பிலை துவையலை வைத்து பறிமாறவும் 

Donnerstag, 4. Oktober 2012

கருவேப்பிலை துவையல்

ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான 
காம்பினேஷன். இட்லிக்கு தொட்டுக்
கொள்ளவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 1 கப், 
சின்ன வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3 
புளி -  சிறிதளவு
தேங்காய் பூ - சிறிதளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் -  2 தேக்கரண்டி 

 செய்முறை: 

ஒரு தாச்சியை வாணலியை 
அடுப்பில் வைத்து அதில் 1 
தேக்கரண்டி எண்ணைய் விட்டு 
அதனுடன் கறிவேப்பிலை, பொடி
யாக நறுக்கிய வெங்காயம், 
மிளகாய்  ஆகியவற்றை போட்டு 
நன்றாக வதக்கிக் கொள்ளவும். 

வதக்கியவற்றை எடுத்து ஒரு 
பாத்திரத்தில் போட்டு நன்றாக 
ஆறவிடவும் 

ஆறிய பின் மிக்ஸியில் வதக்கிய
வற்றை போட்டு அதனுடன் புளி, 
தேங்காய் பூ, உப்பு சிறிதளவு 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
சேர்த்து, கர கரப்பாக அரைத்துக் 
கொள்ளவும். 

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை 
வாணலியை வைத்து அதில் ஒரு
தேக்கரண்டி  எண்ணைய் விட்டு 
அதனுடன்  கடுகினை போட்டு 
தாளிக்கவும்  

தாளித்த பின்னர் இவற்றை 
அரைத்து வைத்தவற்றினுள் 
கொட்டவும். 

Donnerstag, 30. August 2012

பிரெட் சப்பாத்தி

தேவையானவை

பிரெட் துண்டுகள் – 2,
கோதுமை மா– 1கப்,
துருவிய பனீர் – 1/4கப்,
பால் – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2
 கொத்தமல்லி - தேவையான அளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு,
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

 செய்முறை

 பிரெட் துண்டுகளை தண்ணீரில்
நனைத்து பிழிந்து

துருவிய பனீர், வெங்காயத்தாள்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி,
உப்பு, கோதுமை மா சேர்த்துக்
கலந்து,பால் விட்டு கெட்டியாகப் 
பிசையவும்.


இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு,

காயும் தோசைக்கல்லில் போட்டு,
எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

Mittwoch, 29. August 2012

லாலி பாப்



தேவையான பொருட்கள்

கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) - 1
தேசிக்காய் (எலுமிச்சை) - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி உள்ளி (பூண்டு) விழுது - 2 தேக்கரண்டி
சோளம் மா- 2 மேசைக்கரண்டி
கோதுமை மா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு

 செய்முறை

 கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்) 
சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக 
இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, 
ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து
 அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற 
வைக்கவும்.

 பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய 
கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் 
கழுவி தண்ணீரை வடிக்கவும்.

 இதனுடன் கோதுமை மா -சோளம்மா, 
உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை 
சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.

 பிறகு மிளகு தூள், இஞ்சி உள்ளி 
(பூண்டு) விழுது, மிளகாய் தூள், 
ண்ணெய்ஆகியவற்றைசேர்த்து 
நன்கு பிசறி மூன்று மணி நேரம் 
ஊற வைக்கவும்.

 அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில்  
மசாலாவில் ஊறிய கோழிக்கறி 
துண்டுகளை போட்டு நன்றாக 
பொறித்து எடுக்கவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான  நல்ல எலுமிச்சையின்
 மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த 
கோழிக்கறி லாலி பாப் தயார்.

 குறிப்பு

 கோழிக்கறியுடன் ஒவ்வொரு
பொருளாக சேர்த்து பிசறுவதால் 
மசாலா நன்றாக ஒட்டி பிடிக்கும்.

 பொரிக்கும் போது எண்ணெய் சூடானதும் 
தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். 
அப்போதுதான் கோழிக்கறி நன்கு வேகும்.

 கோழிக்கறி மசாலாவில் ஒரு மணி நேரம் 
ஊறினாலே போதுமானது. இருந்தாலும் 
அதிக நேரம் நன்றாக  ஊறினால் சுவை 
கூடுதலாக இருக்கும்.

பிரெட் சுருள்


தேவையானப் பொருட்கள்

முழு பிரெட் - 1 
பொடியாக நறுக்கியவெங்காயம் - 2  
பொடியாக நறுக்கியபச்சை மிளகாய் - 3 
கறிவேப்பிலை - சிறிதளவு 
தயிர் - அரை கப் 
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு 

 செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முழு பிரெட்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பொடியாக நறுக்கிய பச்சை 
மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு, 
தயிர்ஆகியவற்றை போட்டு 
கெட்டியாக பிசைந்து 
கொள்ளவும். 

அடுப்பில் தாட்சியை (வாணலியை) 
வைத்து அதில்  எண்ணெய் விட்டு 
சூடாக்கவும்  அதன் பின்னர் பிசைந்த 
மாவை சிறுசிறு உருண்டைகளாகவோ
நீளவாக்கிலோ உருட்டி சூடான 
எண்ணெய்யில் பொன்னிறமாக 
பொரித்தெடுக்கவும்.

பொரித்தவற்றை எடுத்து ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
பிரெட்சுருள் தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையா
னளவு பிரெட் சுருலை வைத்து 
அதனுடன் விரும்பிய சோஸ்ஸை 
வைத்து பரிமாறவும்

Dienstag, 28. August 2012

சிக்கன் கட்லெட்


தேவையான பொருட்கள்
முள்ளில்லாதகோழிதசை - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
சிறிதாக வெட்டியபச்சைமிளகாய் - 2 
சிறிதாக வெட்டியபெரியவெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
ஸ்ரீலங்காமிளகாய்தூள் - 1மேசைகரண்டி
உப்பு - தேவையானளவு
வெட்டியகறிவேப்பிலை- தேவையானளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - 25 கிராம்
எண்ணெய் - தேவையானளவு


 செய்முறை

ஒரு பாத்திரத்தில் முள்ளில்லாத
கோழிதசையை போடவும் 

 அதன் பின்னர் அதில் கோழி வேக
வைக்க தேவையானளவு தண்ணீர் 
ஊற்றவும்

அதன் பின்னர் அப்பாத்திரத்தை 
அடுப்பில் வைத்து கோழி துண்டினை
 வேகவிடவும்

கோழி வெந்த பின்னர் அதை அடுப்பில் 
இருந்து எடுத்து இன்னொரு பாத்திரத்தில் 
போட்டு ஆறவிடவும் 

ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்
கொள்ளவும்.

அதன் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு
மசித்துக் கொள்ளவும்.

 அதன் பின்னர் வேக வைத்து மசித்த 
உருளைக்கிழங்கினை வெந்தகோழி 
போட்ட பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் அவற்றுடன் சிறிதாக 
வெட்டியவெங்காயம்,சிறிதாக வெட்டிய
பச்சைமிளகாய், உப்பு சிறிதாக வெட்டிய
கறிவேப்பிலை மிளகுத்தூள் ஸ்ரீலங்கா
மிளகாய்தூள் மஞ்சள்கரு முட்டை 
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் அவற்றை ஓரளவு சிறு 
உருண்டைகளாகஉருட்டி வட்டமாகவும் 
கனமாகத் தட்டவும்.

 தட்டியபின்னர் அடித்து வைத்த வெள்ளை
கரு முட்டையில் தட்டியவற்றை போட்டு
 நன்றாக முட்டையை பிரட்டவும் .

அதன் பின்னர் அவற்றை ரஸ்க்தூளில் 
நன்றாக எல்லாபக்கமும் பிர்ட்டவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து எண்ணெய் விட்டு நன்றாக 
கொதிக்கவிடவும்  

எண்ணெய் நன்றாக கொதித்த பின்னர் 
அடுப்பினை ஓரளவு குறைத்துவிடவும் 

அதன் பின்னர் தட்டிய கட்லட்டில் 
சிலவற்றைனை உடையாமல் கொதித்த 
எண்ணெயில் போட்டு பொரியவிடவும்

கட்லட் ஒருபக்கம் பொரிந்ததும் மற்றைய 
பக்கம் திருப்பி பொரியவிடவும் 

கட்லட்டின் இருபுறமும் நன்றாக பொரிந்ததும் 
சுத்தமான சுவையான சத்தான கோழி கட்லட் 
தயாராகிவிடும். .

அதன் பின்னர் அதனை அடுப்பில் உள்ள 
தாட்சியில் உள்ள சூடான எண்ணெய்யில் 
இருந்து எண்ணெய் இல்லாதவாறு 
எடுக்கவும் .

எடுத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு 
சிறிது நேரம் மூடிவிடவும்  


 சிறிது நேரத்தின் பின்னர் ஒருதட்டில் 
பொரித்த சுத்தமான சுவையான சத்தான 
கோழிகட்லட்டில் சிலவற்றை வைத்து 
அதனுடன் தக்காளிசோஸ் வைத்து 
பறிமாறவும் 

கோழி கட்லெட் :

தேவையான பொருட்கள்
முள்ளில்லாதகோழிதசை - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
சிறிதாக வெட்டியபச்சைமிளகாய் - 2 
சிறிதாக வெட்டியபெரியவெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
ஸ்ரீலங்காமிளகாய்தூள் - 1மேசைகரண்டி
உப்பு - தேவையானளவு
வெட்டியகறிவேப்பிலை- தேவையானளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - 25 கிராம்
எண்ணெய் - தேவையானளவு


 செய்முறை

ஒரு பாத்திரத்தில் முள்ளில்லாத
கோழிதசையை போடவும் 

 அதன் பின்னர் அதில் கோழி வேக
வைக்க தேவையானளவு தண்ணீர் 
ஊற்றவும்

அதன் பின்னர் அப்பாத்திரத்தை 
அடுப்பில் வைத்து கோழி துண்டினை
 வேகவிடவும்

கோழி வெந்த பின்னர் அதை அடுப்பில் 
இருந்து எடுத்து இன்னொரு பாத்திரத்தில் 
போட்டு ஆறவிடவும் 

ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்
கொள்ளவும்.

அதன் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு
மசித்துக் கொள்ளவும்.

 அதன் பின்னர் வேக வைத்து மசித்த 
உருளைக்கிழங்கினை வெந்தகோழி 
போட்ட பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் அவற்றுடன் சிறிதாக 
வெட்டியவெங்காயம்,சிறிதாக வெட்டிய
பச்சைமிளகாய், உப்பு சிறிதாக வெட்டிய
கறிவேப்பிலை மிளகுத்தூள் ஸ்ரீலங்கா
மிளகாய்தூள் மஞ்சள்கரு முட்டை 
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் அவற்றை ஓரளவு சிறு 
உருண்டைகளாகஉருட்டி வட்டமாகவும் 
கனமாகத் தட்டவும்.

 தட்டியபின்னர் அடித்து வைத்த வெள்ளை
கரு முட்டையில் தட்டியவற்றை போட்டு
 நன்றாக முட்டையை பிரட்டவும் .

அதன் பின்னர் அவற்றை ரஸ்க்தூளில் 
நன்றாக எல்லாபக்கமும் பிர்ட்டவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து எண்ணெய் விட்டு நன்றாக 
கொதிக்கவிடவும்  

எண்ணெய் நன்றாக கொதித்த பின்னர் 
அடுப்பினை ஓரளவு குறைத்துவிடவும் 

அதன் பின்னர் தட்டிய கட்லட்டில் 
சிலவற்றைனை உடையாமல் கொதித்த 
எண்ணெயில் போட்டு பொரியவிடவும்

கட்லட் ஒருபக்கம் பொரிந்ததும் மற்றைய 
பக்கம் திருப்பி பொரியவிடவும் 

கட்லட்டின் இருபுறமும் நன்றாக பொரிந்ததும் 
சுத்தமான சுவையான சத்தான கோழி கட்லட் 
தயாராகிவிடும். .

அதன் பின்னர் அதனை அடுப்பில் உள்ள 
தாட்சியில் உள்ள சூடான எண்ணெய்யில் 
இருந்து எண்ணெய் இல்லாதவாறு 
எடுக்கவும் .

எடுத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு 
சிறிது நேரம் மூடிவிடவும்  


 சிறிது நேரத்தின் பின்னர் ஒருதட்டில் 
பொரித்த சுத்தமான சுவையான சத்தான 
கோழிகட்லட்டில் சிலவற்றை வைத்து 
அதனுடன் தக்காளிசோஸ் வைத்து 
பறிமாறவும் 

கோழிக்கறி



தேவையானவை 

 கோழி இறைச்சி -500கிராம் 
 காய்ந்த மிளகாய்-5 
 மிளகாத்தூள்-1 +1/2 தேக்கரண்டி 
 திருவியதேங்காய்- அரை மூடி 

 தாளிக்க 

 கடுகு - சிறிதளவு 
 கடலைபருப்பு- சிறிதளவு 
 கறிவேப்பிலை- சிறிதளவு 
 எண்ணெய்-100 மில்லிலீற்றர் 
 உப்பு- தேவைக்கேற்ப 

 செய்முறை

 கோழி இறைச்சியை மிக சிறு 
துண்டாக வெட்டிகழுவி நீரின்றி 
 பிழிந்துஎடுக்கவும் 

 அடுப்பினை குறைத்து அதன் 
மேல் தாட்சியை (வாணலியை
வைக்கவும் 

 அதன் பின்னர் அதில் எண்ணெய் 
 விட்டு சூடாக்கவும் 

 எண்ணெய் சூடான பின்னர் அதில் 
 கடுகு,கடலைபருப்பு ஆகியவற்றை 
 போட்டு தாளிக்கவும்

 தாளித்த பின்னர் அதில் நறுக்கின 
வெங்காயம் ,மிளகாய்,கறிவேப்பிலை 
 ஆகியவற்றை போட்டு வதக்கவும். 

 சுத்தம் செய்து வெட்டி பிழிந்த கோழி 
 இறைச்சி மிளகாய்தூள் ஆகியவற்றை 
 சேர்த்து எண்ணெயில் வதக்கவும் .

 அதன் பின்னர் அதனுடன் தேவையா 
னளவு உப்பு போட்டு அதன் மேல் 
 தேவையானளவுநீர் ஊற்றி அப்பாத்தி 
ரத்தை மூடி வைக்கவும் 

 கோழி இறைச்சி வெந்து தண்ணீர் 
 வற்றியதும் திருவிய தேங்காய் சேர்த்து 
 பிரட்டிஇறக்கவும். 

 அதன் பின்னர் சுத்தமான சுவையான 
 சத்தான கோழி இறைச்சி தயாராகிவிடும் 

 பின்னர் ஒரு தட்டில் சோற்றினை(சாதத் 
தினை) வைத்து அதன் மேல் சுத்தமான 
 சுவையான சத்தான கோழி இறைச்சியில் 
 தேவையானளவினை வைத்து பறிமாறவும்

 தயிர்,ரசம் சாப்பாட்டிற்கும் நன்றாக 
 இருக்கும். 

 குறிப்பு

எண்ணெய் சற்று அதிகமாக 
இருந்தால் தான் ருசியாக இருக்கும்

Montag, 27. August 2012

காளான் கோழிதொக்கு

தேவையான பொருட்கள் 
 கோழி இறைச்சி - 1/2 கிலோ 
நறுக்கியகுடை மிளகாய் - 150 கிராம் 
நறுக்கியகாளான் - 100 கிராம் 
சாம்பார் வெங்காயம் - 150 கிராம் 
பச்சைமிளகாய் - 4 
இடித்தமிளகுத்தூள்  - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி 
இஞ்சி - சிறு துண்டு 
உள்ளி (பூண்டு) - 6 பற்கள் 

 செய்முறை 

கோழி இறைச்சி  துண்டுகளைச் வெட்டி 
கழுவி சுத்தம்செய்து ஒரு பாத்திரத்தில் 
போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து 
அடுப்பில் வைத்து வேக வைக்கவும் 

பின்னர் சாம்பார் வெங்காயத்தை 
சுத்தமாக உரிக்கவும் 

உரித்து  வெங்காயத்தினை நான்காக 
கீறிக்கொள்ளவும், 

கீறிய வெங்காயத்தை ஒரு தட்டில் 
வைக்கவும் 

பின்னர் மிக்ஸியில் அல்லது அம்மியில் 
பச்சை மிளகாயை போட்டு இடிக்கவும். 

மிக்ஸியில் இஞ்சி, உள்ளி (பூண்டு) ஆகிய
வற்றை போட்டு நறுவல் நெறுவலாக
 அரைத்து எடுக்கவும் 

அதன் பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில் 
வைத்து அதில் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய் சூடான பின்னர் அதில் 
வெங்காயத்தை போட்டு நன்றாக 
வதக்கவும். 

வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன்  
நறுக்கியகுடைமிளகாய், நறுக்கியகாளான், 
வேகவைத்த கோழி இரைச்சி துண்டுகள் 
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்

நன்றாக கலந்தவற்றை நன்றாக வதக்கவும். 

வதக்கிய பின்னர் வதக்கியவற்றுடன் இடித்த  
மிளகாய், அரைத்த இஞ்சி உள்ளி(பூண்டு) 
ஆகியவற்றை போடவும் 

போட்டவற்றை நன்றாக கலந்து வதக்கவும் 

 இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர் 
இதனுடன் தேவையானளவு தண்ணீர் விட்டு 
வேகவைக்கவும் 

இவை யாவும் ஓரளவு வெந்த பின்னர் 
இதனுடன் உப்பை போட்டு நன்றாக  கிளறவும். 

நன்றாக கிளறிய பின்னர் நன்றாக வேக விடவும் 

இவை யாவும் வெந்தவுடன் இதனுடன் அரைத்த 
மிளகுத்தூளை போட்டு நன்றாக கிளரவும்  

கிளறிய பின்னர் 2 நிமிடம் பாத்திரத்தை மூடி 
வைத்துவிட்டு அதன் பின்னர் கறியை இறக்கி 
வேறு பாத்திரத்தில் போடவும்.

இப்போது சுத்தமான சுவையான சத்தான 
காளான் கோழி தொக்கு தயாராகிவிட்டது

ஒரு தட்டில் சோறு /சாதம்), புட்டு, இடியப்பம், 
பாண் ஆகியவற்றில் ஒன்றை வைத்து 
அதனுடன் சுத்தமான சுவையான சத்தான 
காளான் கோழிதொக்கினை வைத்து பறிமாறவும்

நெல்லிக்காய் பச்சடி


நெல்லிக்காயில் விற்றமின் ‘சி’சத்து  உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும். 

தேவையானவை: 
பெரிய நெல்லிக்காய் – 6,
தயிர் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையானளவு.

செய்முறை: 
 பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி சீவி
ஒரு பாத்திரத்தில்போடவும்

பின்னர் அதில் உப்பு, பச்சைமிளகாய் தயிர்
ஆகியவற்றை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

கலக்கிய பின்னர் அடுபில் தாட்சியை வைத்து
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில்  கடுகு
போட்டு தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதனை கலக்கியவற்றுடன்
போட்டு மெதுவாக கலக்கவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான
நெல்லிக்காய் பச்சடி தயாராகிவிடும்

நெல்லிக்காய் பச்சடி


தேவையானபொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 6, 
தயிர் – 1 கப், 
பச்சை மிளகாய் – 1, 
கடுகு – 1/2 தேக்கரண்டி 
எண்ணெய் –1 தேக்கரண்டி  
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை:

பெரிய நெல்லிக்காயை சீவவும் 

அதன் பின்னர் அதனை மிக்ஸியில்
போடவும் 

போட்டபின்னர் அதனுடன்  உப்பு, 
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு 
நைஸாக அரைக்கவும்,

அரைத்த பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

போட்ட பின்னர் அதனுடன்  தயிர் 
போட்டு எல்லாவற்றையும் நன்றாக  
கலக்கவும்.

கலந்த பின்னர் அடுப்பில் தாச்சியை 
வைத்து சூடாக்கவும் 

தாச்சி சுட்டதும் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில் கடுகை 
போட்டு தாளிக்கவும் 

கடுகு தாளித்த பின்னர் அடுப்பில் உள்ள
 தாளித்த தாச்சியை இறக்கி வைக்கவும் 

வைத்த பின்னர் தாளித்த கடுகை எடுத்து 
கலந்து வைத்தவற்றுடன் சேர்த்து நன்றாக 
கலக்கவும்
இப்போது சுத்தமான சுவையான சத்தான 
நெல்லிக்காய் பச்சடி தயாராகி விடும் 

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு 
சாதத்தைவைத்து அதனுடன் சுத்தமானதும் 
சுவையானதும் சத்தானதுமான நெல்லிக்காய் 
பச்சடியினை வைத்து  பறிமாறவும்


குறிப்பு: 
நெல்லிக்காயில் நிறைய விற்றமின் ‘சி’சத்து  
உள்ளது அத்துடன் நெல்லிக்காயை சாப்பிட்டால் 
உடல் குளுமை அடையும். 

Sonntag, 26. August 2012

மோர்க் குழம்பு

தேவையானவை:

 1) அரைக்கவும்

தேங்காய் துண்டுகள் – 2,
பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய் – 3,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
சீரகம் – 2 தேக்கரண்டி

2)பொறிக்கவும் 

மோர் – ஒரு கப்,
மஞ்சள்தூள்-அரைத்தேக்கரண்டி
வெந்தயம் – அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங் காயம்- சிறிதளவு
வெண்டைக்காய் (அ) கத்தரிக்காய் வத்தல்

3)
வெள்ளரிக்காய்-1
கொத்தமல்லி இலை– சிறிதளவு,
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு –  1தேக்கரண்டி, 
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை: 

அடி கனமான பாத்திரத்தினை 
வைத்து அதில்  மோரை 
விடவும்

அதன் பின்னர் அதில் அரைத்த 
தேங்காய் கலவை, மஞ்சள்தூள், 
உப்பு ஆகியவையை போட்டு 
இப்பாத்திரத்தை அடுப்பில் 
வைத்து மிதமான தீயில் 
கிளறவும். 

சிறிது நேரத்தின் பின்னர் கலர் 
மாறியதும் அதில் சிறிது தண்ணீர் 
விட்டு கொதிக்க வைக்கவும்  

கொதித்ததும் அதில் பொறித்து 
வைத்துள்ள  வத்தல் வெட்டி 
வைத்துள்ள வெள்ளரிக் ஆகிய
வற்றை சேர்த்து கொதிக்க  
வைக்கவும் 

இவை யாவும் கொதித்ததும் 
இப்பாத்திரத்தை அடுப்பில் 
இருந்து இறக்கவும். 

 அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில் 
 கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், 
பெருங்காயம், கறிவேப்பிலை 
ஆகியவற்றை போட்டு நன்றாக 
தாளிக்கவும் 

தாளித்த பின்னர் இதை செய்து 
வைத்துள்ள  குழம்பில் போட்டு 
அதன் மேல் , கொத்தமல்லி 
இலையை போடவும் 

இபோது சுத்தமான சுவையான 
சத்தான் மோர் குழம்பு தயாராகி
விட்டது 

ஒரு தட்டில் சோற்றினை போட்டு 
அதன் மேல் இக் குழம்பை விட்டு 
பரிமாறவும் 

Samstag, 25. August 2012

ரவை


தேவையான பொருட்கள் 
கோதுமை ரவை- 1/2 கிலோ 
பீன்ஸ்- 100 கிராம் 
காலிபிளவர்- 1 /2 கிலோ 
பச்சை பட்டாணி - 1/2 கிலோ 
பச்சை மொச்சை -100 கிராம் 
கத்தரிக்காய் - 100 கிராம் 
வெங்காயம் - 150 கிராம் 
தக்காளி - 150 கிராம் 
பச்சை மிளகாய்- 4 
இஞ்சி - சிறுதுண்டு 
பூண்டு -10 பல் 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் 
தனியாதூள் -3 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன் 
எலுமிச்சம் பழம் -1 (சாறு எடுக்கவும்) 
பட்டை - 2 சிறுதுண்டு
 லவங்கம் - 2 
புதின இலை - சிறுகட்டு 
எண்ணெய் -1/2 குழிக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
நீர் - இரு பங்கு 

 செய்முறை 

 பச்சை மொச்சையை உரித்துக் 
கொள்ளவும். 

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் 
 கொள்ளவும்.

 இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் 
விழுதாக்கவும். 

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் 
ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் 
சேர்த்துத் தாளிக்கவும்.

 நறுக்கிய வெங்காயம், தக்காளி 
இவற்றைச் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது, புதினா
இலை சேர்த்து வதக்கவும். 

நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, 
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 
வேக விடவும். 

மிளகாய்த்தூள், தனியாதூள், 
மஞ்சள்தூள் சேர்க்கவும். 

அத்துடன் ரவையைப் போல் 
இருமடங்கு நீர் ஊற்றி கொதித்ததும், 
ரவையைச் சேர்த்து உப்பு சரி பார்த்து 
வேக விடவும். 

குறைந்ததீயில் சில நிமிடங்கள் 
வைத்திருந்து, எலுமிச்சம் பழச்சாறு 
சேர்த்து இறக்கவும்.

தக்காளி கொத்சு


தேவையானவை : 
தக்காளி - 1/2 கிலோ,
மிளகாய் வற்றல் - 7,
(தனியா )- 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1.5 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் 1/4 - கப்,
பெருங்காயப் போடி - 2 சிட்டிகை,
பெரிய வெங்காயம் - 2,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு.  - தேவையான அளவு

செய்முறை : 

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர்
விட்டு அதனை அடுப்பில் வைத்து, அதில் தக்காளிப்
பழங்களைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன்
இறக்கவும்.

ஆறிய பின், தண்ணீரை வடித்து
தக்காளியின் மேல்தோலை நீக்கி,

நன்கு பிசைந்து வடிகட்டி வைத்துக்
கொள்ளவும்.

மிளகாய் வற்றல், தனியா, சீரகம்,
தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு
ஆகியவற்றை நைசாக அரைத்துக்
கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, நறுக்கிய
வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும், அரைத்த
விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.

அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், இரண்டு
சிட்டிகை பெருங்காயப் போடி சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி
இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

Freitag, 24. August 2012

கறிவேப்பிலை குழம்பு


தேவையான பொருட்கள்

உதிர்த்த கறிவேப்பிலை - 1 கப்,
செத்தமிளகாய் - 6,
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு -1மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் -  1தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4  தேக்கரண்டி

 தாளிக்க
கடுகு -தேவையானளவு
வெந்தயம் - தேவையானளவு
வடகம் - சிறிதளவு (இருந்தால் போடலாம்)

 செய்முறை :

 தாச்சியில்எண்ணெய் ஊற்றாமல்,
கறிவேப்பிலையை சிறிது சிறிதாக
மொரமொரப்பாக வறுத்து தனியாக
எடுத்து வைக்கவும்.

பிறகு, கடாயில் சிறிது எண்ணெய்
ஊற்றி மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு
சீரகம், மிளகு, பெருங்காயம் இவற்றை
வறுத்து

அதோடு, வறுத்த கறிவேப்பிலையை
சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்க
வேண்டும்.

புளியைக் கரைத்து, கப் தண்ணீர் விட்டு
அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு,
அரைத்ததையும் சேர்த்து நன்றாக கலந்து
 கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி
தாளிக்கும் பொருட்களைப் போட்டு 
தாளித்துகரைசலை ஊற்றி கொதிக்க
விடவும்.

எண்ணெய் மேலே வந்ததும், இறக்கி
பரிமாறவும்.

 சாதத்தோடு ஊற்றி சாப்பிட்டால் மிகவும்
ருசியாக இருக்கும்.

Donnerstag, 23. August 2012

வெண்டிக்காய் சாதம்



தேவையான பொருட்கள் 

 வெட்டிய பிஞ்சு வெண்டிக்காய் - 1 கப், 
வெட்டிய தக்காளிப்பழம் - 2, 
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி(தனியா)தூள் - 1 தேக்கரண்டி
வெட்டிய பச்சை மிளகாய் - 2, 
தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி
 உதிரியாக வடித்த சாதம் - 2 கப், 
சீரகம் - தேவையானளவு
 உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை : 

தாச்சியில் எண்ணெய் விட்டு கொதித்ததும், 
அதில் சீரகத்தை போட்டு தாளிக்கவும். 

தாளித்தபின்னர் அதனுடன்  தக்காளிப்பழம், 
வெண்டிக்காய், மிளகாய்த்தூள், கொத்தமல்லி
த்தூள், பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை 
போட்டு  நன்றாக வதக்கவும். 

வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் 
அதனுடன் தேங்காய்ப்பாலை விட்டு 
நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் கலவை தடிப்பாகும் வரை 
விடவும்

கலவை தடிப்பானதும் அதனுடன்  வடித்த 
சாதத்தை சேர்த்துக் கிளறவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
வெண்டிக்காய் சாதம் தயாராகிவிடும் 

அதன் பின்னர் ஒரு தட்டில் வெண்டிக்காய் 
சாதத்தை வைத்து  சூடாக பரிமாறவும்.

வெண்டிக்காய் சாதம்


தேவையான பொருட்கள் : 
நறுக்கிய பிஞ்சு வெண்டிக்காய் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி 
தனியா தூள் (மல்லி) - 1 தேக்கரண்டி 
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1 மேசைக்க்ரண்டி
உதிரியாக வடித்த சோறு (சாதம்) - 2 கப்
சீரகம் -தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - தேவையானளவு

 செய்முறை : 

வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்ததும்
சீரகத்தை சேர்த்துத் தாளிக்கவும். 

அதன் பின்னர் தக்காளி, வெண்டிக்காய், மிளகாய்த்தூள், 
மல்லித்தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு 
சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெண்டிக்காய் வதங்கியதும், தேங்காய்ப்பாலை 
சேர்க்கவும். 

கலவை கெட்டியானதும், வடித்த சாதத்தை சேர்த்துக் 
கிளறி சூடாக பரிமாறவும்.

Mittwoch, 22. August 2012

முப்பருப்பு ஊத்தாப்பம்

 தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 3 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு - 1 கப் 
பயித்தம்(பாசிப்)பருப்பு - 3மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 கப் 
செத்த (காய்ந்த) மிளகாய் - 8 
பெருஞ்சீரகம்சோம்பு - 1/4 தேக்கரண்டி
சின்னசீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
தேங்காய் துருவல் - 1/4 மூடி 
சின்ன வெங்காயம் - 1/2 கப் 
எண்ணெய் - 1+1/2 கப் 

 செய்முறை 

முதல் நாள் இரவு  ஒரு பாத்திரத்தில் 
அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயித்தம்(பாசிப்)பருப்பு ஆகியவற்றை 
போட்டு கழுவி ஊறவைக்கவும். 

 மறுநாள் காலை முதல் நாள் ஊறப்
போட்டவற்றை சிறிதளவு கரகரப்பாக 
அரைக்கவும். 

அரைத்த பின்னர் அவற்றை ஒரு 
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .

 பின்னர் கிரைண்டரில், மிக்ஸியில் 
அல்லது அம்மியில் மிளகாய், சின்ன
சீரகம், பெருஞ்சீரகம்(சோம்பு), உப்பு 
ஆகியவற்றை போட்டு நன்றாக 
அரைக்கவும். 

 அரைத்த பின்னர் சின்ன வெங்காயத்
தினை சுத்தம் செய்து அதனை பொடிப் 
பொடியாக வெட்டிக்கொள்ளவும். 

வெட்டிய சின்ன வெங்காயத்தை 
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

 பின்னர் கரகரப்பாக அரைத்த மா 
போட்ட பாத்திரத்தில்  திருவிய 
தேங்காய், நறுக்கிய வெங்காயம், 
அரைத்த மிளகாய் விழுது ஆகிய
வற்றை போடவும் 

அதன் பின்னர் அவற்றை நன்றாக 
கலக்கவும் 

கலந்தவற்றை  அடைமா செய்யும் 
பதத்தில் வைத்துக் கொள்ளவும். 

பின்பு அடுப்பில் தோசைக்கல்லினை 
வைத்து சூடாக்கவும் 

தோசைக்கல் சூடேறிய பின்னர்  அதில் 
சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றவும் 

ஊற்றிய பின்னர் அதனை ஓரளவு 
வேக விடவும் 

ஓரளவு வெந்த பின்னர் அவற்றை 
திருப்பி போடவும்  

திருப்பி போட்ட பின்னர் அதனை 
ஓரளவு வேகவிடவும்  

ஓரளவு  வெந்த பின்னர் அதனை 
எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 
வைக்கவும் 

இப்படியே எல்லா ஊத்தப்பங்க
ளையும் செய்து பாத்திரத்தில் 
போட்டு வைக்கவும் 

 பின்னர் அடுப்பில் தாட்சியினை வைத்து 
அதில் பொரிக்கத் தேவையானளவு 
எண்ணைய்யை விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடேரினதும் செய்த 
 ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக 
போட்டு பொரிக்கவும்  

இவை நன்றாக சிவந்து மொருமொரு
வென பொரிந்ததும் அதனை எடுத்து 
வேறு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான சூடான முப்பருப்பு ஊத்தாப்பம் 
தயாராகிவிடும்

தயாரான பின்னர் ஒருதட்டில் தேவை
யானளவு முப்பருப்பு ஊத்தாப்பங்களை
 வைத்து பரிமாறவும் 

விருபினாள் ஏதாவது சட்னி அல்லது 
ஏதாவது இனிப்புவகை வைத்து பரிமாறலம்

Dienstag, 21. August 2012

சமையலில் காரம் அதிகமாக இருந்தால்


சமையலில் காரம் அதிகமாக இருந்தால் தேவையானளவு தேசிக்காய்சாறு (எலுமிச்சைப் பழச்சாறு) சேர்க்கவும்.

Montag, 20. August 2012

கொள்ளு ரசம்


உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள் கொள்ளு ரசம் ஆகும் கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய இயலும். 

தேவையான பொருட்கள்:- 

கொள்ளு - இரண்டு டீஸ்பூன் 
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன் 
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன் 
மிளகு - ஒரு டீஸ்பூன் 
சீரகம் - அரைடீஸ்பூன் 
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது 
தக்காளி - 1 1/௨ 
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளி - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:- 
நெய் - ஒரு டீஸ்பூன் 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன் 
பெருங்காயம் - சிறிது 
கொத்தமல்லி - சிறிதளவு 


செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிறிது நேரம் சிவக்க வருக்க வேண்டும். 

ஆறியவுடன், கொள்ளுடன், தனியா, முக்கள் தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை vizhuthaaga அரைக்கவும்.

 ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். 

தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும். 

கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.

கொள்ளு ரசம்

கொள்ளு ரசம் - உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள். கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய முடியும். 

தேவையான பொருட்கள்

கொள்ளு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி(தனியா) - 2 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு -  2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
தக்காளி பழம்- 2
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
புளி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

 தாளிக்க:-
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி(தனியா)  - சிறிதளவு

செய்முறை

வெறும் தாட்சியை (வாணலியினை) அடுப்பில்
வைத்து அதில் கொள்ளை போட்டு எண்ணெய்
விடாமல் சிறிதுநேரம் சிவக்க வறுக்கவேண்டும்.

வறுத்தபின்னர் அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போட்டு ஆறவிடவேண்டும்

ஆறியவுடன் மிக்ஸியில் கொள்ளு
கொத்தமல்லி(தனியா), தக்காளிபழம்
ஒன்று ,துவரம்பருப்பு, மிளகு, சீரகம்,
வெந்தயம் ஆகியவற்றை போடவும்

போட்டபின்னர் அவற்றி விழுதாக
அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ரசம் வைக்கும்
பாத்திரத்தினை வைத்து அதில் , ஒரு
தக்காளிபழம், புளி விழுது, ஆகியவற்றை
போடவும்

ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.

தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.

கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.