தேவையானபொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 6,
தயிர் – 1 கப்,
பச்சை மிளகாய் – 1,
கடுகு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் –1 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
செய்முறை:
பெரிய நெல்லிக்காயை சீவவும்
அதன் பின்னர் அதனை மிக்ஸியில்
போடவும்
போட்டபின்னர் அதனுடன் உப்பு,
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு
நைஸாக அரைக்கவும்,
அரைத்த பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில்
போடவும்
போட்ட பின்னர் அதனுடன் தயிர்
போட்டு எல்லாவற்றையும் நன்றாக
கலக்கவும்.
கலந்த பின்னர் அடுப்பில் தாச்சியை
வைத்து சூடாக்கவும்
தாச்சி சுட்டதும் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில் கடுகை
போட்டு தாளிக்கவும்
கடுகு தாளித்த பின்னர் அடுப்பில் உள்ள
தாளித்த தாச்சியை இறக்கி வைக்கவும்
வைத்த பின்னர் தாளித்த கடுகை எடுத்து
கலந்து வைத்தவற்றுடன் சேர்த்து நன்றாக
கலக்கவும்
இப்போது சுத்தமான சுவையான சத்தான
நெல்லிக்காய் பச்சடி தயாராகி விடும்
அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு
சாதத்தைவைத்து அதனுடன் சுத்தமானதும்
சுவையானதும் சத்தானதுமான நெல்லிக்காய்
பச்சடியினை வைத்து பறிமாறவும்
குறிப்பு:
நெல்லிக்காயில் நிறைய விற்றமின் ‘சி’சத்து
உள்ளது அத்துடன் நெல்லிக்காயை சாப்பிட்டால்
உடல் குளுமை அடையும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.