இப்புளிச்சாதத்தில் காபோவைதரேற்று
கொழுப்புச்சத்து, உயிர்சத்து,புரதச்சத்து,
மினரல் போன்ற பல சத்துக்கள் அடங்கி
உள்ளது. அத்துடன் சுத்தமானதும் சுவை
யானதும் ஆகும். ஆகவே இதன் சுவையை
அறிய விரும்பினால் இதனை செய்து
சாப்பிட்டு அறியலாம் .
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி அல்லது சம்பா அரிசி - 1 சுண்டு
துப்பரவாக்கிய கடலைப்பருப்பு - 50கிராம்
பழப்புளி - பாக்களவு
சிறிது சிறிதாக வெட்டிய செத்தமிளகாய் - 5
சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1
சிறிது சிறிதாக வெட்டிய உருளைகிழங்கு - 1
மாஜரீன், பட்டர்அல்லது நெய் - தேவையானளவு
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1 தேக்கரண்டி
கடுகு -சிறிதளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு நன்றாக ஊறவிடவும்,
அதன் பின்னர் அடுபில் பானையை வைத்து அல்லது ரைஸ்குக்கரின் சட்டியில் அரிசி ,கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு அவியவிடவும்.
இவையாவும் நன்றாக அவிந்ததும் கஞ்சியை வடித்துவிடவும் அல்லது ஈரப்பதன் நீங்க ஊறவிடவும்.
அதன் பின்னர் அடுப்பில் இருந்து அல்லது ரைஸ் குக்கரில் இருந்து இப்பாத்திரத்தினை எடுத்து இறக்கிவைக்கவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு ஆறவிடவும்.
பின்னர் சிறிது சிறிதாக வெட்டிய உருளைக்கிழங்கினை ஒரு பாத்திரத்தில் போடவும்.
போட்ட பின்னர் அப்பாத்திரத்தில் உப்பு , மிளகாய்த்தூள் போட்டு பிரட்டவும்.
பிரட்டிய பின்னர் அடுப்பில் ஒரு தாட்சியை வைத்து அதில் எண்ணையை விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடான பின்னர் சிறிது சிறிதாக வெட்டி பிரட்டிய உருளைக் கிழங்கினை போட்டு மொருக பொரிக்கவும்.
பொரித்த பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
போட்டு வைத்த பின்னர் ஒரு தம்ளரில் பழப்புளி, தண்ணீர் ஆகியவற்றை போட்டு கரைக்கவும் (அரைத்தம்ளர் அளவு கரைசல்)
பின்னர் அடுபில் தாச்சியை வைத்து அதில் மாஜரீன் அல்லது நெய்யை விட்டு அதில் கடுகை போட்டு வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டிய செத்தமிளகாய் ,சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதங்கவிடவும்.
அவை ஓரளவு வதங்கிய பின்பு பெருஞ்சீரகம் (சோம்பு), கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகுதூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
அவையாவும் நன்றாக வதங்கிய பின்னர் அதனுடன் அரை தம்ளர் புளிக்கரைசலை விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
கொதிக்கவிட்ட பின்னர் இவற்றுடன் உப்பை சேர்க்கவும்.
சேர்த்த பின்னர் அவற்றை நன்றாக கொதிக்கவிடவும்.
இவை யாவும் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது இதில் ஆறவைத்திருக்கும் சோறு (சாதம்) பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கினையும் போட்டு நன்றாக கிளரி விடவும்.
இவையாவும் நன்றாக சேர்ந்த பின்னர் அதில் உள்ள தண்ணீரை வற்ற விடவும்.
அதில் உள்ள தண்ணீர் யாவும் வற்றிய பின்னர் இப்பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு நன்றாக ஆறவிடவும்.
அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான புளிச்சாதம் தாயாராகிவிடும்.
சுத்தமான சுவையான சத்தான புளிச்சாதம் தயாரான பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு இப் புளிசாததை வைத்து அதனுடன் சிறிதளவு இஞ்சி சம்பலை அல்லது ஏதாவது இறைச்சி கறியை வைத்து பறிமாறவும்.
இக்குறிப்பினை எமக்கு வழங்கியவர் -
திருமதி சுமனா பவானந் (ஜேர்மனி)