தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப்
சீனி - 2 கப்
பால் - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்(உடைத்தது) - 5
கயூ (முந்திரிப்பருப்பு) - 10
செய்முறை
உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)
கொடைக்கடலை தண்ணீர் ஆகியவற்றை
சேர்த்து மெதுமையாக அரைத்துக் கொள்ளவும்
அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து
அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை
போட்டு பொரிக்கவும்
அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)
இறக்கிய பின்னர் பொரித்தவற்றை வானொலி
யில்(தாட்சியில்) இருந்து எடுத்து ஒரு தட்டில்
போட்டு ஆறவிடவும்
அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்
தை வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை
பால் சேர்த்து காச்சவும். பால் பொங்கி வந்த
பின்பு அதனுடன் சீனியை (சக்கரையை)சேர்த்து
காச்சவும்
இவை யாவும் கொதித்த பின்பு உடைத்த
ஏலக்காய்,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்
பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்
காமல் நன்றாக கிளறவும்
அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை
இறக்கவும்.
இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்து
மிக்க கொண்டைக்கடலை பாயாசம்தயாராகி
விடும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.