தேவையான பொருட்கள்
இட்லி மா - 2 கப்
இளம்துளிர் முருங்கை இலை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி மா,
முருங்கைக்கீரை, பச்சைமிளகாய்
விழுது,உப்பு ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கலக்கி வைக்கவும்
பின்பு அடுப்பில் இட்லி செய்யும்
பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு
அதனுள்இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன்மேற் மூடியால் மூடி
பின்பு அதனை சூடாக்கவும்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.
நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.
அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.
அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
தயாராகிவிடும்.
அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.
பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
அவிக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பார் அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.
முருங்கைக்கீரை, துளிராக இருக்க
வேண்டியது முக்கியம்.
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும்
சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான்
இருக்கிறது.
இட்லி மா - 2 கப்
இளம்துளிர் முருங்கை இலை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி மா,
முருங்கைக்கீரை, பச்சைமிளகாய்
விழுது,உப்பு ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கலக்கி வைக்கவும்
பின்பு அடுப்பில் இட்லி செய்யும்
பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு
அதனுள்இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன்மேற் மூடியால் மூடி
பின்பு அதனை சூடாக்கவும்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.
நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.
அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.
அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
தயாராகிவிடும்.
அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.
பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
அவிக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பார் அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.
முருங்கைக்கீரை, துளிராக இருக்க
வேண்டியது முக்கியம்.
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும்
சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான்
இருக்கிறது.