அப்பிள் பழதுவையலானது சத்தானது
சுத்தமானது ,வித்தியாசமான சுவையானது,
உயிர்சத்து சி நிறைந்தது ஆகும்.
தோல்,விதைகளற்ற அப்பிள் பழம்- ஒரு கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - பாதி
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ - 2 கப்
தக்காளிப்பழம் - பாதி
கடுகு - 1/4தேக்கரண்டி
சீரகம் - 1/4தேக்கரண்டி
நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு(லெமன் ஜூஸ்) - 1தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - பாதி
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ - 2 கப்
தக்காளிப்பழம் - பாதி
கடுகு - 1/4தேக்கரண்டி
சீரகம் - 1/4தேக்கரண்டி
நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு(லெமன் ஜூஸ்) - 1தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
செய்முறை
(1)கிரைண்டரில்(மிக்சியில்)முற்றிய விதைகளற்ற
(1)கிரைண்டரில்(மிக்சியில்)முற்றிய விதைகளற்ற
அப்பிள்பழம் பச்சைமிளகாய், இஞ்சி, (கால்பாதி)
வெங்காயம், உப்பு, தேங்காய்ப்பூ, தக்காளிப்பழம்
இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக
அரைக்கவும்.
(2)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து
சூடாக்கவும்.
(3)சூடானதும் அதில் எண்ணெய் விட்டு
கொதிக்கவிடவும்.
(5)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு,
சீரகம், கால் பாதி வெங்காயம் ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.
(6)தாளித்த பின்னர் தாளித்தவைகளை
அரைத்தவைகளுடன் சேர்த்து கலக்கவும்.
(7)கலக்கிய பின்னர் அவற்றுடன் கறிவேப்பிலை,
தேசிக்காய்சாறு(லைம் ஜுஸ் ) ஆகியவற்றையும்
சேர்த்து கலக்கவும்.
(8)இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர்
சுத்தமான வித்தியாசமான சுவையுடைய
சத்துடைய அப்பிள்பழ துவையல் தயாராகிவிடும்.
(9) தயாரான பின்பு ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தை)
போட்டு அதனுடன் சுத்தமான சுவையான அப்பிள்
பழ துவையலையும் வைத்து பரிமாறவும்.
"குறிப்பு"
(1) அப்பிள்பழம் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.
(2)இதை சோறு, பாண், இடியப்பம், தோசை,
இட்லி இவையாவற்றுடனும் (விருப்பத்திற்
கேற்ப) சாப்பிடலாம்.
(3)சூடான உணவுடன் சாப்பிட மிக சுவையாக
இருக்கும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.