கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Mai 2020

மஷ்ரூம் மசாலா நோன்பு கஞ்சி

மஷ்ரூம் மசாலா நோன்பு கஞ்சி ( குக்கர் முறை) சைவம்


 தேவையான பொருட்கள்

 பொடித்த நொய் அரிசி – அரை டம்ளர்
 பாசி பருப்பு – இரண்டு மேசைகரண்டி
 கரட் – ஒரு சிறிய துண்டு
 மஷ்ரூம் - 50 கிராம்
 வெங்காயம் – ஒன்று
 தக்காளி – ஒன்று
 எண்ணெய் + நெய் - 1 தேக்கரண்டி
 பட்டை - 1
 பச்சை மிளகாய் – ஒன்று
 உப்பு – தேவைக்கு
 பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்
 பொடியாக அரிந்த பூண்டு - முன்று
 கொத்துமல்லி தழை – சிறிது
 புதினா – சிறிது
 மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
 மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
 உப்பு – கால் தேக்கரண்டி

 தாளிக்க
எண்ணெய் + நெய் - இரண்டு தேக்கரண்டி
 சின்ன வெங்காயம் - ஆறு
 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
 கொத்து மல்லி தழை - கைக்கு ஒரு கொத்து

 செய்முறை

 அடுப்பின் மீது குக்கரை ஏற்றி எண்ணெய் ஊற்றி சிறிது காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து வெங்கயம் + கரட்டை போட்டு வதக்கவும்,

 பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.

 தக்காளி மடங்கியதும் மஷ்ரூமை நான்காக வெட்டி சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 4 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பாசிபருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் வந்ததும் இறக்கவும்.

ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறி விட்டு கொதிக்க விடவும்.

 தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கிளவும்.

அரிசி ப‌ருப்பு இர‌ண்டும் வெந்து க‌ஞ்சி ப‌த‌ம் வ‌ந்த‌தும் இறக்க‌வும்.

கடைசியாக எண்ணெய் + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இறக்கவும்.

Dienstag, 12. Mai 2020

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

தேவையான பொருட்கள் 

 பச்சரிசி – 100 கிராம் 
 பயத்தம் பருப்பு – 25 கிராம் 
 சின்ன வெங்காயம் – 100 கிராம் 
 கரட் – 1
 தக்காளி – 1 
 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் 
 சீரகம் – 1/2 டீஸ்பூன் 
 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் 
 பச்சை மிளகாய் – 2
 பிரியாணி இலை – 1 
 கொத்தமல்லி – சிறிது 
 புதினா – சிறிது 
 தேங்காய் பால் – அரை கப் 
 எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
 நெய் – 1 டேபிள் ஸ்பூன் 
 உப்பு – தேவையான அளவு 


 செய்முறை 

 கரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

 பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். 

 அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். 

மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும் 

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

 தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்

 கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும். 

 அடுத்து அதை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி பரிமாறவும். 

சுவையான நோன்பு கஞ்சி ரெடி.