கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 17. März 2012

அம்பிரலாதோஸி

அம்பறெல்லா தோஸி இஸ்லாமிய சகோதரிகள்
தங்களுடைய நோன்பு காலங்களில் சாப்பிடுவத
ற்காக நோன்பு ஆரம்பமாவதற்கு ஒருகிழமைக்கு
முன்பு செய்து போத்தலில் போட்டு வைப்பார்கள்.
இது ஒரு மாதம்வரை பழுதடையாமல் இருக்கும்
 இதுசுவையான ஒருஇனிப்பு வகையாகும்.

தேவையானபொருட்கள் 
அம்பறெல்லாக்காய் - 10
சீனி (சர்க்கரை) - 2 கப்
ஏலக்காய்த் தூள் - (3-5)
தண்ணீர் - (1 -2) கப் (சீனிப்பாகுகாய்ச்சக்கூடியளவு)

செய்முறை 
1 )முதலில் அம்பறெல்லா காயின் தோலை
    கத்தியினால் சீவி அகற்றவும்.

2 )அதன் பின்னர் தோலை சீவிய
    அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது
   vஉரலில் போட்டு எல்லாப்பக்கமும் அடித்து
    சப்பையாக்கவும்(தட்டையாக்கவும்).

3 )அதன் பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில்
     போட்டுவைக்கவும் .

4 )அதன் பின்னர் இன்னொருபாத்திரத்தில்
    தண்ணீருடன் சீனியை போட்டு நன்றாக
    கரைக்கவும்.

5 )கரைத்த பின்னர் இவற்றுடன்  ஏலக்காய்த்
   தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக
    பாகு காய்ச்சவும்

6 )பாகு காச்சிய பின்னர் பாகில் தட்டையான
  (சப்பையான) அம்பறெல்லா காயை போட்டு
  நன்றாக பிரட்டவும் (அம்பறேல்லாகாயில்
  சீனிப்பாகு ஒட்டக்கூடியதாக சேர்த்து
  பிரட்டவும் (கலக்கவும்)).

7 )கலக்கிய பின்னர் சிறிது நேரம் அடுப்பில்
   வைத்து பாகு எல்லா அம்பிரலா காயில்
   சேரும் வரை திரும்பவும் நன்றாக பிரட்டவும்

8 ) பிரட்டிய சிறிது நேரத்தின் பின்னர் அடுப்பில்
    இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும் :

9)இறக்கிய பின்னர்அம்பறெல்லா காயை
    இன்னொரு பாத்திரத்தில் போடவும்.

10)போட்ட பின்னர் இவற்றை வெய்யில்
     வைத்து நன்றாக காயவிடவும்

11)இவையாவும் ஒரளவு காய்ந்ததும்
    ஈரமற்ற கரண்டியால் மறு பக்கம்
    திருப்பி போட்டு காய விடவும்
   (குலுக்கி குலுக்கி)

12 )இவை யாவும் நன்றாக காய்ந்ததும்
       சுத்தமான சுவையான இனிப்பான
       அம்பறெல்லா தோஸி தயாராகிவிட்டது .

13 )தயாரான பின்னர் ஒருதட்டில் அம்பறெல்லா
     தோஸியை வைத்து பரிமாறவும்

கவனிக்கவேண்டியவிஷயங்கள் - 
(1)அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது
  உரலில் போட்டு அடித்து சப்பையாக்கவும்.
(2)நன்றாக சீனியை பாகு காய்ச்சவும்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் அம்பறெல்லா தோஸியை
சாப்பிடவேண்டாம். சாப்பிட விரும்பினால்
வைத்தியரின் ஆலோசனையை பெறவும்.

 மாற்று முறை - 
சீனிக்கு(சர்க்கரை) பதிலாக தேனை
பயன்படுத்தலாம். ஆனால் சீனிப்பாகுவே
சுவையானது தேன் சேர்த்தால்
வித்தியாசமான சுவை கிடைக்கும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.