இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையானதும்
சத்தானதுமான சட்னியே கடாய்
சட்னியாகும்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 1
தனியா (மல்லி)- 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு (விரும்பினாள்)
பூண்டு - 4 பல் (விரும்பினாள்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு-தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
செய்முறை:
வாணலியில் (தாட்சியில்) சிறிதளவு எண்ணெய்யை
விட்டு சூடாக்கவும்
அதன் பின்னர் அதில்கடலை பருப்பு, தனியா(மல்லி)
, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்து தனியாக
எடுத்து வைக்கவும்.
பிறகு வாணலியில்(தாட்சியில்) சிறிது எண்ணைய்
விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதங்கவும்.
வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு
வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தாட்சியை (வாணலியை)
அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்
ஆறியபின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு
அதனுடன் தேவையானளவு உப்பு சேர்த்து நன்றாக
அரைக்கவும்.
விரும்பினாள் இஞ்சி, பூண்டு வதக்கி அவற்றுடன்
சேர்த்து அரைக்கவும்.
ருசியான கடாய் சட்னி தயார்.
இவை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள
ருசியாக இருக்கும்.அனைவரும் செய்து
பாருங்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.