தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் (தோல்சீவிய)-தேவையானளவு
பசுப்பால் /தேங்காய்பால் -தேவையானளவு
கருவப்பிலை -சிறிதளவு
உள்ளி(பூண்டு)(வெட்டியது)-சிறிதளவு
மிளகாய்த்தூள்-தேவையானளவு
பழப்புளி-சிறிதளவு உப்பு -தேவையானளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
வெங்காயம்(சிறிதாக வெட்டியது) -1 /2பாதி பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது)-(1 -2 )
கடுகு -அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரைதேக்கரண்டி
எண்ணெய்-சிறிதளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை(தாட்சியை)வைத்து
அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில் கடுகை
போட்டு வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம் (சோம்பு), கருவப்பிலை,உள்ளி(பூண்டு), பச்சைமிளகாய்,
வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் .
தாளித்த பின்பு அதனுடன் வெட்டி சுத்தம் செய்து
துண்டுகளாக்கிய முருங்கைக் காய்களை போட்டு
நன்றாக கலந்து ஓரளவு பொரிக்கவும் .
இவையாவும் தேவையானளவு பொரிந்ததும்
அதனுடன் மிளகாய்த்தூளை போட்டு கலந்து
மிளகாய்த்தூளின் பச்சவாசனை போகும்வரை
பொரிய விடவும் .
அதன் பின்பு அதனுடன் பழப்புளி, தண்ணீர் ,
உப்பு ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடவும்.
குழம்பு ஓரளவு கொதித்த பின்பு அதனுடன்
பாலை கலந்து நன்றாக கொதிக்கவிடவும் .
இவையாவும் நன்றாக கொதித்த பின்பு
இறக்கி வைக்கவும். இப்போது சுவையான
சுத்தமான செய்வதிற்கு இலகுவான சத்தான
முருங்கைக் காய் குழம்பு தயாராகி விட்டது.
அதன் பின்பு ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை) , புட்டினை,இடியப்பத்தை,பரோட்டாவை, ரொட்டியை,சப்பாத்தியை,தோசையை,
இட்லியை, வைத்து அதனுடன் இக்குழம்பை
விட்டு பரிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.