தேவையான பொருட்கள்
கோழி இறைச்சி - 1/2 கிலோ
நறுக்கியகுடை மிளகாய் - 150 கிராம்
நறுக்கியகாளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
இடித்தமிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
உள்ளி (பூண்டு) - 6 பற்கள்
செய்முறை
கோழி இறைச்சி துண்டுகளைச் வெட்டி
கழுவி சுத்தம்செய்து ஒரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து
அடுப்பில் வைத்து வேக வைக்கவும்
பின்னர் சாம்பார் வெங்காயத்தை
சுத்தமாக உரிக்கவும்
உரித்து வெங்காயத்தினை நான்காக
கீறிக்கொள்ளவும்,
கீறிய வெங்காயத்தை ஒரு தட்டில்
வைக்கவும்
பின்னர் மிக்ஸியில் அல்லது அம்மியில்
பச்சை மிளகாயை போட்டு இடிக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, உள்ளி (பூண்டு) ஆகிய
வற்றை போட்டு நறுவல் நெறுவலாக
அரைத்து எடுக்கவும்
அதன் பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில்
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய் சூடான பின்னர் அதில்
வெங்காயத்தை போட்டு நன்றாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன்
நறுக்கியகுடைமிளகாய், நறுக்கியகாளான்,
வேகவைத்த கோழி இரைச்சி துண்டுகள்
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்
நன்றாக கலந்தவற்றை நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின்னர் வதக்கியவற்றுடன் இடித்த
மிளகாய், அரைத்த இஞ்சி உள்ளி(பூண்டு)
ஆகியவற்றை போடவும்
போட்டவற்றை நன்றாக கலந்து வதக்கவும்
இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர்
இதனுடன் தேவையானளவு தண்ணீர் விட்டு
வேகவைக்கவும்
இவை யாவும் ஓரளவு வெந்த பின்னர்
இதனுடன் உப்பை போட்டு நன்றாக கிளறவும்.
நன்றாக கிளறிய பின்னர் நன்றாக வேக விடவும்
இவை யாவும் வெந்தவுடன் இதனுடன் அரைத்த
மிளகுத்தூளை போட்டு நன்றாக கிளரவும்
கிளறிய பின்னர் 2 நிமிடம் பாத்திரத்தை மூடி
வைத்துவிட்டு அதன் பின்னர் கறியை இறக்கி
வேறு பாத்திரத்தில் போடவும்.
இப்போது சுத்தமான சுவையான சத்தான
காளான் கோழி தொக்கு தயாராகிவிட்டது
ஒரு தட்டில் சோறு /சாதம்), புட்டு, இடியப்பம்,
பாண் ஆகியவற்றில் ஒன்றை வைத்து
அதனுடன் சுத்தமான சுவையான சத்தான
காளான் கோழிதொக்கினை வைத்து பறிமாறவும்
கோழி இறைச்சி - 1/2 கிலோ
நறுக்கியகுடை மிளகாய் - 150 கிராம்
நறுக்கியகாளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
இடித்தமிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
உள்ளி (பூண்டு) - 6 பற்கள்
செய்முறை
கோழி இறைச்சி துண்டுகளைச் வெட்டி
கழுவி சுத்தம்செய்து ஒரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து
அடுப்பில் வைத்து வேக வைக்கவும்
பின்னர் சாம்பார் வெங்காயத்தை
சுத்தமாக உரிக்கவும்
உரித்து வெங்காயத்தினை நான்காக
கீறிக்கொள்ளவும்,
கீறிய வெங்காயத்தை ஒரு தட்டில்
வைக்கவும்
பின்னர் மிக்ஸியில் அல்லது அம்மியில்
பச்சை மிளகாயை போட்டு இடிக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, உள்ளி (பூண்டு) ஆகிய
வற்றை போட்டு நறுவல் நெறுவலாக
அரைத்து எடுக்கவும்
அதன் பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில்
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய் சூடான பின்னர் அதில்
வெங்காயத்தை போட்டு நன்றாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன்
நறுக்கியகுடைமிளகாய், நறுக்கியகாளான்,
வேகவைத்த கோழி இரைச்சி துண்டுகள்
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்
நன்றாக கலந்தவற்றை நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின்னர் வதக்கியவற்றுடன் இடித்த
மிளகாய், அரைத்த இஞ்சி உள்ளி(பூண்டு)
ஆகியவற்றை போடவும்
போட்டவற்றை நன்றாக கலந்து வதக்கவும்
இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர்
இதனுடன் தேவையானளவு தண்ணீர் விட்டு
வேகவைக்கவும்
இவை யாவும் ஓரளவு வெந்த பின்னர்
இதனுடன் உப்பை போட்டு நன்றாக கிளறவும்.
நன்றாக கிளறிய பின்னர் நன்றாக வேக விடவும்
இவை யாவும் வெந்தவுடன் இதனுடன் அரைத்த
மிளகுத்தூளை போட்டு நன்றாக கிளரவும்
கிளறிய பின்னர் 2 நிமிடம் பாத்திரத்தை மூடி
வைத்துவிட்டு அதன் பின்னர் கறியை இறக்கி
வேறு பாத்திரத்தில் போடவும்.
இப்போது சுத்தமான சுவையான சத்தான
காளான் கோழி தொக்கு தயாராகிவிட்டது
ஒரு தட்டில் சோறு /சாதம்), புட்டு, இடியப்பம்,
பாண் ஆகியவற்றில் ஒன்றை வைத்து
அதனுடன் சுத்தமான சுவையான சத்தான
காளான் கோழிதொக்கினை வைத்து பறிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.