தேவையானவை
கோழி இறைச்சி -500கிராம்
காய்ந்த மிளகாய்-5
மிளகாத்தூள்-1 +1/2 தேக்கரண்டி
திருவியதேங்காய்- அரை மூடி
தாளிக்க
கடுகு - சிறிதளவு
கடலைபருப்பு- சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்-100 மில்லிலீற்றர்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை
கோழி இறைச்சியை மிக சிறு
துண்டாக வெட்டிகழுவி நீரின்றி
பிழிந்துஎடுக்கவும்
அடுப்பினை குறைத்து அதன்
மேல் தாட்சியை (வாணலியை
வைக்கவும்
அதன் பின்னர் அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடான பின்னர் அதில்
கடுகு,கடலைபருப்பு ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்
தாளித்த பின்னர் அதில் நறுக்கின
வெங்காயம் ,மிளகாய்,கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
சுத்தம் செய்து வெட்டி பிழிந்த கோழி
இறைச்சி மிளகாய்தூள் ஆகியவற்றை
சேர்த்து எண்ணெயில் வதக்கவும் .
அதன் பின்னர் அதனுடன் தேவையா
னளவு உப்பு போட்டு அதன் மேல்
தேவையானளவுநீர் ஊற்றி அப்பாத்தி
ரத்தை மூடி வைக்கவும்
கோழி இறைச்சி வெந்து தண்ணீர்
வற்றியதும் திருவிய தேங்காய் சேர்த்து
பிரட்டிஇறக்கவும்.
அதன் பின்னர் சுத்தமான சுவையான
சத்தான கோழி இறைச்சி தயாராகிவிடும்
பின்னர் ஒரு தட்டில் சோற்றினை(சாதத்
தினை) வைத்து அதன் மேல் சுத்தமான
சுவையான சத்தான கோழி இறைச்சியில்
தேவையானளவினை வைத்து பறிமாறவும்
தயிர்,ரசம் சாப்பாட்டிற்கும் நன்றாக
இருக்கும்.
குறிப்பு
எண்ணெய் சற்று அதிகமாக
இருந்தால் தான் ருசியாக இருக்கும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.