தேவையான பொருள்கள்
வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப்
கடலை மா-1/2கப்
அரிசிமா-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
இஞ்சிவிழுது-1/2தேக்கரண்டி
உள்ளி(பூண்டு) விழுது-1/2தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை),கடலை மா,உப்பு,
இஞ்சிவிழுது,உள்ளி(பூண்டு) விழுது,
மிளகாய் தூள்,அரிசி மா ஆகியவற்றை
போடவும்.
போட்ட பின்னர் எல்லாவற்றையும்
நன்றாக கலக்கவும்
கலந்த பின்னர் 5-10 நிமிடம் மூடி
வைக்கவும்
அதன் பின்னர் ஒரு வாணலியினை
அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதிற்கு
தேவையானளவு எண்ணெய் விடவும்
எண்ணெயை சூடாக்கவும்.
எண்ணெய் சூடான பின்னர் அதில்
சிறிதளவு கலந்து வைத்தவற்றை
போடவும்
அதன் பின்னர் அடுப்பின் நெருப்பு (தீ)
எரியும் அளவை குறைக்கவும்.
எண்ணெய்யில் போட்டவற்றை
பொன்னிறமாக பொரிக்கவும்
பொன்னிறமாக பொரிந்ததும்
அவற்றை எண்ணெய் வடித்து
எடுத்து ஒரு பாத்திரத்தில்
போடவும்
போட்ட பின்னர் அதனை சூடு
ஆறவிடவும்
இதனை போல எல்லாவற்றையும்
பொரித்து எடுக்கவும்
எல்லாவற்றையும் பொரித்து எடுத்து
ஒரு பாத்திரத்தில் போட்ட பின்னர்
சுத்தமான சுவையான கச்சான்
(வேர்கடலை) பக்கோடா தயாராகி
விடும்
கச்சான் (வேர்கடலை) பக்கோடா
தயாரான பின்னர் ஒரு தட்டில்
தேவையானளவு பகோடாவினை
வைத்து பறிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.