தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1கப்,
சின்ன வெங்காயம் - 2,
பச்சை மிளகாய்- 3,
புளி - சிறிதளவு,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
உப்பு - தேவையானளவு
எண்ணெய் -2 தேக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் தாட்சியினை வைத்து சூடாக்கவும்
அதன் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் விட்டு அதனுடன் கறிவேப்பிலை,
பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்
ஆகியவற்றை போட்டு வதக்கவும்
வதக்கிய பின்னர் அதனை அடுப்பிலிருந்து
எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்
இவை யாவும் ஆறிய பின் வதக்கிய
எல்லாவற்றையும் மிக்ஸியில் போடவும்
பின்னர் அதனுடன் புளி, தேங்காய்ப்பூ, உப்பு ,
சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து
கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை எடுத்து ஒரு தட்டில் போடவும்
பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு
தாளிக்கவும்
தாளித்த பின்னர் அதனை அரைத்தவற்றுடன்
போட்டு நன்றாக கலக்கவும்
கலந்த பின்னர் சுத்தமான சுவையான
கறிவேப்பிலை துவையல் தயாராகிவிடும்
ஒரு தட்டில் ரசம், சாம்பார் சாதம் இட்லி புட்டு
பாண் இடியப்பம் தோசை இவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் சுத்தமான சுவையான
கறிவேப்பிலை துவையலை வைத்து பறிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.