தேவையான பொருட்கள்
கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) - 1
தேசிக்காய் (எலுமிச்சை) - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி உள்ளி (பூண்டு) விழுது - 2 தேக்கரண்டி
சோளம் மா- 2 மேசைக்கரண்டி
கோதுமை மா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை
கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்)
சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக
இரண்டு மூன்று கீரல்கள் போட்டு,
ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து
அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற
வைக்கவும்.
பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய
கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில்
கழுவி தண்ணீரை வடிக்கவும்.
இதனுடன் கோதுமை மா -சோளம்மா,
உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை
சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.
பிறகு மிளகு தூள், இஞ்சி உள்ளி
(பூண்டு) விழுது, மிளகாய் தூள்,
எண்ணெய்ஆகியவற்றைசேர்த்து
நன்கு பிசறி மூன்று மணி நேரம்
ஊற வைக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
எண்ணெய் விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில்
மசாலாவில் ஊறிய கோழிக்கறி
துண்டுகளை போட்டு நன்றாக
பொறித்து எடுக்கவும்.
அதன் பின்னர் சுத்தமான சுவையான
சத்தான நல்ல எலுமிச்சையின்
மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த
கோழிக்கறி லாலி பாப் தயார்.
குறிப்பு
கோழிக்கறியுடன் ஒவ்வொரு
பொருளாக சேர்த்து பிசறுவதால்
மசாலா நன்றாக ஒட்டி பிடிக்கும்.
பொரிக்கும் போது எண்ணெய் சூடானதும்
தீயை மிதமாக வைத்து பொரிக்கவும்.
அப்போதுதான் கோழிக்கறி நன்கு வேகும்.
கோழிக்கறி மசாலாவில் ஒரு மணி நேரம்
ஊறினாலே போதுமானது. இருந்தாலும்
அதிக நேரம் நன்றாக ஊறினால் சுவை
கூடுதலாக இருக்கும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.