தேவையான பொருட்கள்
உதிர்த்த கறிவேப்பிலை - 1 கப்,
செத்தமிளகாய் - 6,
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு -1மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு -தேவையானளவு
வெந்தயம் - தேவையானளவு
வடகம் - சிறிதளவு (இருந்தால் போடலாம்)
செய்முறை :
தாச்சியில்எண்ணெய் ஊற்றாமல்,
கறிவேப்பிலையை சிறிது சிறிதாக
மொரமொரப்பாக வறுத்து தனியாக
எடுத்து வைக்கவும்.
பிறகு, கடாயில் சிறிது எண்ணெய்
ஊற்றி மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு
சீரகம், மிளகு, பெருங்காயம் இவற்றை
வறுத்து
அதோடு, வறுத்த கறிவேப்பிலையை
சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்க
வேண்டும்.
புளியைக் கரைத்து, கப் தண்ணீர் விட்டு
அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு,
அரைத்ததையும் சேர்த்து நன்றாக கலந்து
கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி
தாளிக்கும் பொருட்களைப் போட்டு
தாளித்துகரைசலை ஊற்றி கொதிக்க
விடவும்.
எண்ணெய் மேலே வந்ததும், இறக்கி
பரிமாறவும்.
சாதத்தோடு ஊற்றி சாப்பிட்டால் மிகவும்
ருசியாக இருக்கும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.