தக்காளி - 1/2 கிலோ,
மிளகாய் வற்றல் - 7,
(தனியா )- 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1.5 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் 1/4 - கப்,
பெருங்காயப் போடி - 2 சிட்டிகை,
பெரிய வெங்காயம் - 2,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு. - தேவையான அளவு
செய்முறை :
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர்
விட்டு அதனை அடுப்பில் வைத்து, அதில் தக்காளிப்
பழங்களைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன்
இறக்கவும்.
ஆறிய பின், தண்ணீரை வடித்து
தக்காளியின் மேல்தோலை நீக்கி,
நன்கு பிசைந்து வடிகட்டி வைத்துக்
கொள்ளவும்.
மிளகாய் வற்றல், தனியா, சீரகம்,
தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு
ஆகியவற்றை நைசாக அரைத்துக்
கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, நறுக்கிய
வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும், அரைத்த
விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.
அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், இரண்டு
சிட்டிகை பெருங்காயப் போடி சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி
இட்லி/தோசையுடன் பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.