கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 20. August 2012

கொள்ளு ரசம்

கொள்ளு ரசம் - உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள். கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய முடியும். 

தேவையான பொருட்கள்

கொள்ளு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி(தனியா) - 2 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு -  2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
தக்காளி பழம்- 2
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
புளி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

 தாளிக்க:-
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி(தனியா)  - சிறிதளவு

செய்முறை

வெறும் தாட்சியை (வாணலியினை) அடுப்பில்
வைத்து அதில் கொள்ளை போட்டு எண்ணெய்
விடாமல் சிறிதுநேரம் சிவக்க வறுக்கவேண்டும்.

வறுத்தபின்னர் அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போட்டு ஆறவிடவேண்டும்

ஆறியவுடன் மிக்ஸியில் கொள்ளு
கொத்தமல்லி(தனியா), தக்காளிபழம்
ஒன்று ,துவரம்பருப்பு, மிளகு, சீரகம்,
வெந்தயம் ஆகியவற்றை போடவும்

போட்டபின்னர் அவற்றி விழுதாக
அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ரசம் வைக்கும்
பாத்திரத்தினை வைத்து அதில் , ஒரு
தக்காளிபழம், புளி விழுது, ஆகியவற்றை
போடவும்

ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.

தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.

கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.