கூழ். இந்த கம்மஞ்சோறு கொஞ்சம்
வெதுவெதுன்னு இருக்கறப்போவே
உருண்டைகளாக உருட்டி தண்ணீரில்
போட்டு வைக்க வேண்டும்.
வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு ,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து
கூழாக குடிக்கலாம்.
அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர்
சாதமாகவும் சாப்பிடலாம். ஒரு வாரம்
வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால்,
அந்த தண்ணீரை மட்டும் தினமும்
மாற்ற வேண்டும்.
அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து
குடித்தால் நல்லா இருக்கும்.
புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும்.
கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி
எடுப்பாங்க.
இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி
எடுக்கலாம்.
- கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு
தனியும் - குடல் நோய்களுக்கு வராமல்
பாதுகாக்கும்
- உடல் வலிமை சேர்க்கும் கம்மஞ்சோறு
செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு
வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே
தனிதான்.
கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர்
ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர்
சேர்த்து குடிக்க வேண்டும்
இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து
குடிக்க வேண்டும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.