கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 22. August 2012

முப்பருப்பு ஊத்தாப்பம்

 தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 3 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு - 1 கப் 
பயித்தம்(பாசிப்)பருப்பு - 3மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 கப் 
செத்த (காய்ந்த) மிளகாய் - 8 
பெருஞ்சீரகம்சோம்பு - 1/4 தேக்கரண்டி
சின்னசீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
தேங்காய் துருவல் - 1/4 மூடி 
சின்ன வெங்காயம் - 1/2 கப் 
எண்ணெய் - 1+1/2 கப் 

 செய்முறை 

முதல் நாள் இரவு  ஒரு பாத்திரத்தில் 
அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயித்தம்(பாசிப்)பருப்பு ஆகியவற்றை 
போட்டு கழுவி ஊறவைக்கவும். 

 மறுநாள் காலை முதல் நாள் ஊறப்
போட்டவற்றை சிறிதளவு கரகரப்பாக 
அரைக்கவும். 

அரைத்த பின்னர் அவற்றை ஒரு 
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .

 பின்னர் கிரைண்டரில், மிக்ஸியில் 
அல்லது அம்மியில் மிளகாய், சின்ன
சீரகம், பெருஞ்சீரகம்(சோம்பு), உப்பு 
ஆகியவற்றை போட்டு நன்றாக 
அரைக்கவும். 

 அரைத்த பின்னர் சின்ன வெங்காயத்
தினை சுத்தம் செய்து அதனை பொடிப் 
பொடியாக வெட்டிக்கொள்ளவும். 

வெட்டிய சின்ன வெங்காயத்தை 
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

 பின்னர் கரகரப்பாக அரைத்த மா 
போட்ட பாத்திரத்தில்  திருவிய 
தேங்காய், நறுக்கிய வெங்காயம், 
அரைத்த மிளகாய் விழுது ஆகிய
வற்றை போடவும் 

அதன் பின்னர் அவற்றை நன்றாக 
கலக்கவும் 

கலந்தவற்றை  அடைமா செய்யும் 
பதத்தில் வைத்துக் கொள்ளவும். 

பின்பு அடுப்பில் தோசைக்கல்லினை 
வைத்து சூடாக்கவும் 

தோசைக்கல் சூடேறிய பின்னர்  அதில் 
சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றவும் 

ஊற்றிய பின்னர் அதனை ஓரளவு 
வேக விடவும் 

ஓரளவு வெந்த பின்னர் அவற்றை 
திருப்பி போடவும்  

திருப்பி போட்ட பின்னர் அதனை 
ஓரளவு வேகவிடவும்  

ஓரளவு  வெந்த பின்னர் அதனை 
எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 
வைக்கவும் 

இப்படியே எல்லா ஊத்தப்பங்க
ளையும் செய்து பாத்திரத்தில் 
போட்டு வைக்கவும் 

 பின்னர் அடுப்பில் தாட்சியினை வைத்து 
அதில் பொரிக்கத் தேவையானளவு 
எண்ணைய்யை விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடேரினதும் செய்த 
 ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக 
போட்டு பொரிக்கவும்  

இவை நன்றாக சிவந்து மொருமொரு
வென பொரிந்ததும் அதனை எடுத்து 
வேறு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான சூடான முப்பருப்பு ஊத்தாப்பம் 
தயாராகிவிடும்

தயாரான பின்னர் ஒருதட்டில் தேவை
யானளவு முப்பருப்பு ஊத்தாப்பங்களை
 வைத்து பரிமாறவும் 

விருபினாள் ஏதாவது சட்னி அல்லது 
ஏதாவது இனிப்புவகை வைத்து பரிமாறலம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.