கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம்
உ தாரணம்
http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk
kalaikalakam-tamil blogspot.in
kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது
அன்புடன்
கலைக்கழகங்களின் நிர்வாகி
Sonntag, 26. September 2010
Sonntag, 19. September 2010
கொண்டைக்கடலை பாயாசம்
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப்
சீனி - 2 கப்
பால் - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்(உடைத்தது) - 5
கயூ (முந்திரிப்பருப்பு) - 10
செய்முறை
உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)கொடைக்கடலை
தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மெதுமையாக அரைத்துக்
கொள்ளவும்
அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதில்
கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை போட்டு
பொரிக்கவும்
அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)இறக்கிய
பின்னர்பொரித்தவற்றை வானொலியில்(தாட்சியில்)
இருந்துஎடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்
அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை
வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை பால்
சேர்த்து காச்சவும்.
பால் பொங்கி வந்த பின்பு அதனுடன் சீனியை
(சக்கரையை)சேர்த்து காச்சவும்
இவையாவும் கொதித்த பின்பு உடைத்த ஏலக்காய்
,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்பருப்பு)ஆகியவற்றைப்
போட்டு அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும்
அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்துமிக்க
கொண்டைக்கடலை பாயாசம்தயாராகிவிடும்.
கொண்டைக்கடலை - 1 கப்
சீனி - 2 கப்
பால் - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்(உடைத்தது) - 5
கயூ (முந்திரிப்பருப்பு) - 10
செய்முறை
உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)கொடைக்கடலை
தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மெதுமையாக அரைத்துக்
கொள்ளவும்
அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதில்
கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை போட்டு
பொரிக்கவும்
அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)இறக்கிய
பின்னர்பொரித்தவற்றை வானொலியில்(தாட்சியில்)
இருந்துஎடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்
அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை
வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை பால்
சேர்த்து காச்சவும்.
பால் பொங்கி வந்த பின்பு அதனுடன் சீனியை
(சக்கரையை)சேர்த்து காச்சவும்
இவையாவும் கொதித்த பின்பு உடைத்த ஏலக்காய்
,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்பருப்பு)ஆகியவற்றைப்
போட்டு அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும்
அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்துமிக்க
கொண்டைக்கடலை பாயாசம்தயாராகிவிடும்.
Donnerstag, 16. September 2010
நெத்தலி-65
தேவையான பொருட்கள்
நெத்தலிக்கருவாடு -250 கிராம்
கடலை மா -3 தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு-அரைதேக்கரண்டி
இஞ்சி அரைத்தவிழுது -அரை தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)விழுது -அரைதேக்கரண்டி
பச்சை மிளகாய் (அரைத்தவிழுது)-2
செத்தல் (காய்ந்த)மிளகாய் (அரைத்தவிழுது)-7
மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
செய்முறை
1)ஓரு பாத்திரத்தில் நெத்தலிகருவாட்டை போட்டு
அதன் தலைப்பகுதியை அகற்றிய பின்பு அதனுடன்
தண்ணீர் விட்டு அதிலுள்ள மண்ணை அகற்றி
நன்றாக சுத்தம் செய்யவும்.
(2)சுத்தம் செய்த பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போடாவும்.
(3)பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்)
சாற்றினை பிழிந்து விடவும் பின்பு கடலைமா,
இஞ்சி அரைத்தவிழுது, உள்ளி(பூண்டு)அரைத்த
விழுது, பச்சை மிளகாய்அரைத்த விழுது, செத்தல்
(காய்ந்த)மிளகாய்(அரைத்த விழுது)மஞ்சள்தூள்
உப்பு ஆகிய வற்றை போட்டு நன்றாக கலக்கவும் .
(4)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கிய பின்பு கலந்து வைத்துள்ளவற்றை
கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும் .
(5)இவை எல்லாவற்றையும் பொரித்தபின்பு
சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான
நெத்தலி -65 தயாராகி விடும்.
(6)இதனை இதனை சோற்றுடன்(சாதத்துடன்)
அல்லது தனியாகவோ பரிமாறலாம் .
Mittwoch, 15. September 2010
யாழ்ப்பாணக்கூழ்
இலங்கையின் வடமாகாணத்தில் இக்கூழ் மிகவும் பிரபல்லியமானது. இது மிகவும் சத்து நிறைந்த உணவாகும்.
தேவையான பொருட்கள்
ஒடியல் மா - 500 கிராம்
பெரிய மீன் - 2
நண்டு - 4
இறால் - 1 கிலோ
மரவள்ளிக்கிழங்கு பெரியது - 1
பயத்தங்காய் - 300 கிராம்
பலாக்கொட்டை - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 20-25
புளி - 75 கிராம்
உப்பு - தேவையானளவு
தேங்காய்ச் சொட்டு - ஒரு பாதி மூடி
செய்முறை
ஒடியல் மாவை சலித்து தண்ணீரில் கரைத்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
ஒடியல்மா அடியில் இருக்கும் தண்ணீர் மேலே தெளிந்து இருக்கும் அப்போது தண்ணீரை வெளியில் ஊற்றவும்.
மீண்டும் தண்ணீரை விட்டு கலந்துவிடவும்.
இப்படி 4 முறை செய்யவும். ஏனென்றால் அதில் உள்ள காரல் தன்மை குறைந்து விடும்.
மீன், இறால், நண்டை சுத்தப்படுத்தி கழுவி, வெட்டி வைக்கவும்.
மரவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
பயத்தங்காயை 2 அங்குல நீளத்துண்டுகளாக ஒடித்து வைக்கவும்.
பலாக்கொட்டையை தோல் உரித்து இரண்டாகப் பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மீனை வேகவைத்து, முள்ளை அகற்றி விடவும்.
புளியை 3 கப் நீரில் கரைத்து வைக்கவும்.
மிளகாயை அரைத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு இறால், நண்டு, பயத்தங்காய், பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வேகவிடவும்.
அவை 1/2 பதம் வெந்ததும் மரவள்ளிக்கிழங்கைப் போடவும்.
கிழங்கு அவிந்து வர மிளகாய்த்தூள்,புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் அவித்த மீனைப் போடவும்.
பின்பு ஒடியல் மாவை கரைத்து விடவும்.
மா வெந்து கூழ் தடிப்பானதும் இறக்கவும். சுவையான ஒடியல் கூழ் தயார்.
சுடச் சுட தேங்காய் சொட்டை கடித்துக் குடிக்க சுவையாக இருக்கும்.
குறிப்பு
முள் இல்லாத அல்லது முள் குறைவான மீன் தான் இதற்கு நல்லது.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரம், உப்பு, புளிப்பைக் கூட்டிக் குறைக்கலாம்.
அசைவம் சாப்பிடாதவர்கள் மேலே கொடுக்கப்பட்ட காய்கறிகளை மட்டும் சேர்த்து இக்கூழை செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒடியல் மா - 500 கிராம்
பெரிய மீன் - 2
நண்டு - 4
இறால் - 1 கிலோ
மரவள்ளிக்கிழங்கு பெரியது - 1
பயத்தங்காய் - 300 கிராம்
பலாக்கொட்டை - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 20-25
புளி - 75 கிராம்
உப்பு - தேவையானளவு
தேங்காய்ச் சொட்டு - ஒரு பாதி மூடி
செய்முறை
ஒடியல் மாவை சலித்து தண்ணீரில் கரைத்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
ஒடியல்மா அடியில் இருக்கும் தண்ணீர் மேலே தெளிந்து இருக்கும் அப்போது தண்ணீரை வெளியில் ஊற்றவும்.
மீண்டும் தண்ணீரை விட்டு கலந்துவிடவும்.
இப்படி 4 முறை செய்யவும். ஏனென்றால் அதில் உள்ள காரல் தன்மை குறைந்து விடும்.
மீன், இறால், நண்டை சுத்தப்படுத்தி கழுவி, வெட்டி வைக்கவும்.
மரவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
பயத்தங்காயை 2 அங்குல நீளத்துண்டுகளாக ஒடித்து வைக்கவும்.
பலாக்கொட்டையை தோல் உரித்து இரண்டாகப் பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மீனை வேகவைத்து, முள்ளை அகற்றி விடவும்.
புளியை 3 கப் நீரில் கரைத்து வைக்கவும்.
மிளகாயை அரைத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு இறால், நண்டு, பயத்தங்காய், பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வேகவிடவும்.
அவை 1/2 பதம் வெந்ததும் மரவள்ளிக்கிழங்கைப் போடவும்.
கிழங்கு அவிந்து வர மிளகாய்த்தூள்,புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் அவித்த மீனைப் போடவும்.
பின்பு ஒடியல் மாவை கரைத்து விடவும்.
மா வெந்து கூழ் தடிப்பானதும் இறக்கவும். சுவையான ஒடியல் கூழ் தயார்.
சுடச் சுட தேங்காய் சொட்டை கடித்துக் குடிக்க சுவையாக இருக்கும்.
குறிப்பு
முள் இல்லாத அல்லது முள் குறைவான மீன் தான் இதற்கு நல்லது.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரம், உப்பு, புளிப்பைக் கூட்டிக் குறைக்கலாம்.
அசைவம் சாப்பிடாதவர்கள் மேலே கொடுக்கப்பட்ட காய்கறிகளை மட்டும் சேர்த்து இக்கூழை செய்து குடிக்கலாம்.
Abonnieren
Posts (Atom)