கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 15. September 2010

யாழ்ப்பாணக்கூழ்

இலங்கையின் வடமாகாணத்தில் இக்கூழ் மிகவும் பிரபல்லியமானதுஇது மிகவும் சத்து நிறைந்த உணவாகும்.

தேவையான பொருட்கள் 

ஒடியல் மா - 500 கிராம்
பெரிய மீன் - 2
நண்டு - 4
இறால் - 1 கிலோ
மரவள்ளிக்கிழங்கு பெரியது - 1
பயத்தங்காய் - 300 கிராம்
பலாக்கொட்டை - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 20-25
புளி - 75 கிராம்
உப்பு - தேவையானளவு
தேங்காய்ச் சொட்டு - ஒரு பாதி மூடி

செய்முறை 

ஒடியல் மாவை சலித்து தண்ணீரில் கரைத்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.

ஒடியல்மா அடியில் இருக்கும் தண்ணீர் மேலே தெளிந்து இருக்கும் அப்போது தண்ணீரை வெளியில் ஊற்றவும்

மீண்டும் தண்ணீரை விட்டு கலந்துவிடவும்

இப்படி 4 முறை செய்யவும். ஏனென்றால் அதில் உள்ள காரல் தன்மை குறைந்து விடும்.

மீன், இறால், நண்டை சுத்தப்படுத்தி கழுவி, வெட்டி வைக்கவும்.

மரவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும்.

பயத்தங்காயை 2 அங்குல நீளத்துண்டுகளாக ஒடித்து வைக்கவும்.

பலாக்கொட்டையை தோல் உரித்து இரண்டாகப் பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மீனை வேகவைத்து, முள்ளை அகற்றி விடவும்.

புளியை 3 கப் நீரில் கரைத்து வைக்கவும்

மிளகாயை அரைத்து வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு இறால், நண்டு, பயத்தங்காய், பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வேகவிடவும்.

அவை 1/2 பதம் வெந்ததும் மரவள்ளிக்கிழங்கைப் போடவும்.

கிழங்கு அவிந்து வர மிளகாய்த்தூள்,புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் அவித்த மீனைப் போடவும்

பின்பு ஒடியல் மாவை கரைத்து விடவும்.

மா வெந்து கூழ் தடிப்பானதும் இறக்கவும். சுவையான ஒடியல் கூழ் தயார்.

சுடச் சுட தேங்காய் சொட்டை கடித்துக் குடிக்க சுவையாக இருக்கும்.

குறிப்பு 


முள் இல்லாத அல்லது முள் குறைவான மீன் தான் இதற்கு நல்லது

உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரம், உப்பு, புளிப்பைக் கூட்டிக் குறைக்கலாம்

அசைவம் சாப்பிடாதவர்கள் மேலே கொடுக்கப்பட்ட காய்கறிகளை மட்டும் சேர்த்து இக்கூழை செய்து குடிக்கலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.