தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி -1 கப்
வெட்டிய உருளைக்கிழங்கு -1 /4 கப்
சிறிதாக வெட்டிய கரட்-1 /4 கப்
சிறிதாக வெட்டிய பீன்ஸ் -1 /4 கப்
பட்டாணி - 1 /4கப்
நறுக்கிய தக்காளிப்பழம்-1 /4கப்
நறுக்கிய வெங்காயம் -1 /4கப்
பச்சைமிளகாய் - 2 - 3
பிரிஞ்சி இலை -1
இஞ்சி விழுது -1 /2 தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது -1 /2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
நெய் -தேவையானளவு
உப்பு- தேவையானளவு
செய்முறை
(1)அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி
அதில் நெய் விட்டு சூடாக்கவும்.
(2)சூடாக்கியபின்பு அதில் பிரிஞ்சி இலை,
நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை
சேர்த்து நன்றாக வதக்கவும்.
(3)இவையாவும் நன்றாக வதங்கிய பின்பு
இவற்றுடன் கீறிய பச்சைமிளகாய்,
இஞ்சி விழுது , உள்ளி(பூண்டு )விழுது
ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை நன்றாக வதக்கவும்.
(4)பின்பு இவற்றுடன் கரம்மசாலாத்தூள்
மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கிளறவும் .
(5)நன்றாக கிளறிய பின்னர் வெட்டிய,
நறுக்கிய காய்கறிகள்,உப்பு ஆகியவற்றை
சேர்த்து நன்றாக கலக்கவும்.
(6)பின்பு கலக்கியவற்றுடன் தண்ணீர் விட்டு
மூடி (அரைவாசிப் பதத்தில்) வேகவிடவும் .
(7)அதன் பின்னர் இப்பாத்திரத்தை அடுப்பில்
இருந்து இறக்கி ஆறவிடவும்.
(8)பின்னர் அடுப்பில் தாட்சியை(வாணலியை )
வைத்து நெய் விட்டு சூடாக்கவும்.
(9)நெய் விட்டு சூடாக்கிய பின்னர் அதில்
கழுவிய பாசுமதி அரிசியை போட்டு
வறுக்கவும் .
(10)அரிசி வறுத்த பின்னர் அடுப்பில் இருந்து
இறக்கவும்.
(11)அதன் பின்னர் மரக்கறி கலவை உள்ள
ஆற வைத்த பாத்திரத்தை அடுப்பில்
வைத்து அதனுடன் நெய்யில் வறுத்த
பாசுமதி அரிசியை போட்டு பிரியாணிக்கு
தேவையான பதத்தில் மிதமான நெருப்பில்
(தீயில் )வேகவிடவும்.
(12)இவையாவும் வெந்த பின்னர் இவற்றை
இறக்கிவைக்கவும்.
(13)இறக்கிய பின்னர் சுவையான சத்தான
மரக்கறி பிரியாணி தயாராகிவிடும் .
(14)ஒரு தட்டில் தேவையான அளவு
மரக்கறி பிரியாணி வைத்து
அதனுடன் கறிவேப்பிலை சம்பல்
அல்லது வெங்காய சம்பல் வைத்து
பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.