கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 25. Oktober 2010

எள்ளுப்பாகு

எள்ளுப்பாகு இலங்கை மக்களிடையே மிகவும்
பிரபல்யமான ஓர் உணவு வகையாகும். இதை
இலங்கையில் பெரியபிள்ளையான(வயதிற்குவந்த (ருதுவான))குழந்தைகளுக்கு சத்துமிக்க உணவாக 
எள்ளுப்பாகு கொடுக்கப்படும் அத்துடன் இதை 
நெஞ்சுதிடமாக(தையரியமாக) இருப்பதற்கும் 
கொடுப்பார்கள் அத்துடன் கறுப்பு எள்ளு  அதிகமான  
மருத்துவப் பண்புகளை கொண்டது அத்துடன் கறுப்பு 
எள்ளில்அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது
வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள 
எள்ளின் வகைகளில் அதிகளவு இரும்புச்சத்து 
நிறைந்து உள்ளது அத்துடன் எள்ளின் இலைகளை 
எடுத்து நீரில் போட்டு கசக்கினால் நீரில் வழுவழு
வென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் 
கழுவினால் கண்கள் நன்கு பிரகாசிக்கும்  அத்துடன் 
கண் நரம்புகள் பலப்படும் எள்ளின் பூவானது கண்
நோய்களை குணப்படுத்தும்.எள்ளினது  இலைகளை 
நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் 
கட்டிகள் மறையும்.எள்ளின் காயையும், தோலையும் 
உலர்த்திச்(காயவைத்து ) சுட்டு சாம்பலாக்கி ஆறாத 
புண்கள் மீது தடவினால் புண்கள் மிகவிரைவில் 
ஆறும்.எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து 
தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளுவிதை
யை இலேசாக வறுத்துபொடிசெய்து நெய்யுடன்சேர்த்து 
சாப்பிட்டால் மூலநோய் குறையும்.தோலில் சொறி
சிரங்கு புண்கள்உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து
 மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.
நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு 
கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் 
அணுகாது.கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக 
வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் 
போட்டு 2 மணித்தியாலம்  ஊறவைத்து அதனுடன் 
தேவையானஅளவு பால் மற்றும் பனைவெல்லம் 
சேர்த்து காலையும்மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்
சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.வயிற்றுப் 
போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு
தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று 
வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் கொலரா 
மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு 
நீங்கும்.எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் 
தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை
குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.உடற்சூடு 
தலைப் பாரம் குறையும்.
தேவையானபொருட்கள் 
துப்பரவாக்கிய எள்ளு 250 கிராம்
இடித்தரித்தசீனி - 150 கிராம் (2 மேசைக்கரண்டி)
நெய் - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி (மட்டமாக)


செய்முறை 
1.அடுப்பில் தாட்சியை வைத்து அதை சூடாக்கி 
  அதில் எள்ளை போட்டு மெல்லிய பொன்னிறமாக
   வரும் வரை வறுக்கவும்.

2.வறுத்த பின்னர் எள்ளை உரலில் இட்டு சீனியும்
   சேர்த்து மென்மையாக (பசுந்தையாக) இடிக்கவும்.

3.  இடித்தபின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து
    அதில் நெய்யை விட்டு சூடாக்கவும்.

4.நெய் சூடான பின்னர் சூடான நெய்யை இடித்த
    கலவையில் ஊற்றி ஏலக்காய்த்தூளும் சேர்த்து
    இடித்து ஓரளவு (விரும்பியளவு) பெரிய உருண்டை
    களாக பிடிக்கவும்.

5.அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
   எள்ளுப்பாகு தயாராகிவிடும்

6.அதன்பின்னர் ஒருதட்டில் தயாரித்த எள்ளுபாகில்
   சிலவற்றை வைத்து பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.