கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 23. Oktober 2010

லவேரியா

லவேரியாவில் மாச்சத்து, இனிப்புசத்து, புரதச்சத்து கொழுப்புச்சத்து போன்ற பல சத்துகள் உள்ளது .இந்த லவேரியாவை இலங்கையில் வாழ்கின்ற சிங்களமக்கள் மிகமிக விரும்பி உண்பார்கள் அத்துடன் லவேரியா சிங்கள மக்களின் பாரம்பரிய உணவாகும்.லவேரியாவில் கல்சியம், இரும்பு, காபோவைதரேட் விற்றமின் B1,B2,B3,B6,B9 மக்னீசியம் ,பொஸ்பரஸ், பொட்டாசியம் சோடியம் ஆகியசத்துக்கள் காணப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

தோல்நீக்கிவறுத்துகுற்றிய பாசிப்பயறு -1 சுண்டு
தேங்காய்ப்பூ - 3 சுண்டு
சக்கரைதூள் /கற்கண்டு தூள்- 1 சுண்டு
ஏலக்காய்த்தூள் - 2 தேக்கரண்டி
வறுத்துஅரித்தஅரிசிமா - 2 சுண்டு(நிரப்பி)
உப்பு -தேவையானளவு
எண்ணைய்- 6 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையானளவு
எண்ணைய்பூசிய வாழையிலை - 36 துண்டுகள்

செய்முறை 

(1 ) அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தோல் நீக்கிவறுத்துகுற்றிய பாசிப்பயறு, தண்ணீர் ஆகியவற்றை போட்டு அவிய விடவும் .

(2 )பாசிப்பயறு முக்கால் பதமாக அவிந்த பின்பு அடுப்பில் உள்ள அந்த பாத்திரத்தை இறக்கி அதில் உள்ள தண்ணீரை வடிக்கவும் .

(3 )தண்ணீரை வடித்தபின்பு முக்கால்பதம் அவிந்த பாசிப்பயறை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்ப்பூ,சக்கரை/கற்கண்டு ஆகியவற்றை போட்டு கரண்டியினால் நன்றாக கலக்கவும்

(4 )பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சக்கரை/கற்கண்டு முற்றாக கரையும் வரை நன்றாக கிளரவும்.

(5 )சக்கரை /கற்கண்டு நன்றாக கரைந்து பாகு தடிக்கத் தொடங்கும் போது ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.

(6 )நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போடவும் .

(7 ) பின்பு வேறொரு பாத்திரத்தில் அரிசிமா,உப்பு நீர்,எண்ணைய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும் .

(8 )கலந்த பின்பு அதனுடன் தேவையானளவு கொதித்த நீரை விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக குழைக்க வேண்டும்.(இடியப்ப பதம் )

(9 )பின்பு குழைத்த மாவை இடியப்ப உரலில் போட்டு அதை எண்ணைய்பூசிய வாழையிலைதுண்டில் மெல்லிய இடியப்பங்களாக பிழியவும்.

(10 )இடியப்பங்களாக பிழிந்தவற்றின் நடுவில் 1மேசைக் கரண்டி பாசிப்பயற்று கலவையை வைத்து இலை யுடன் சேர்த்து பாதியாக மடித்து விளிம்பு பகுதிகளை மெதுவாக அமர்த்தவும்.

(11 )அடுப்பில் இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தை வைத்து அதில் தேவையானளவு தண்ணீர் விட்டு சூடாக்கவும்.

(12 ) தண்ணீர் சூடான பின்பு ஏற்கனவே செய்து மடித்து வைத்துள்ள இடியப்பங்களை இடியப்ப தட்டில் இரண்டு இரண்டாக வைத்து ஆவியில் அவிக்கவும் .

(13 ) அவித்து எடுத்த பின்பு அதை ஆறவிடவும்.

(14 )ஆறிய பின்பு சுவையான சத்தான லவேரியா தயாராகிவிடும்

(15 ) அதன் பின்பு அதை பரிமாறலாம்.

மாற்று முறை
(1)வாழையிலைக்கு பதிலாக சாப்பாடு கட்டும் தாள்கள் அல்லது சாதாரண தாள்கள் பயன்படுத்தலாம். (2)ஏலக்காய்த்தூளுக்கு பதிலாகஅரைத்தேக்கரண்டி) மிளகுத்தூள்,(அரைதேக்கரண்டி) சீரகம் சேர்த்து பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை

சக்கரை நோயாளர்,இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். 

பரிமாறும் அளவு
(10 - 16 )நபர்களுக்கு

ஆயத்த நேரம் 
1 மணித்தியாலங்கள்


சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலங்கள்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.