கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 5. November 2010

கோவா(கபேஜ்) வடை

கோவா வடை கார்போவைதரேட்,
கொழுப்பு, புரதம், இரும்பு, உயிர்சத்து
A,B1,B2,B3,B5,B6,B9,C, பொட்டாசியம்,
பொஸ்பரஸ், மக்னீஸியம்,சோடியம்,
கல்சியம் ஆகியசத்துக்கள் நிறைந்ததும்
சுத்தமானதும் செய்வதிற்கு இலகுவான
துமான  ஒர் உணவுப்பொருள் ஆகும் .

தேவையான பொருட்கள் 
உளுத்தம் பருப்பு - ஒரு சுண்டு
வெங்காயம் (பெரியது) - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கோவா(கபேஜ்) - சிறிதளவு
உள்ளி - ஒரு பல்


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை
போட்டு அதனுடன் தண்ணீரை விட்டு
(தண்ணீர் உளுத்தம்பருப்பை விட
ஓரளவு அதிகமாக இருக்கவேண்டும்)
 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் ஊறிய பருப்புடன் உப்பு,
சுத்தம் செய்து ஓரளவு துண்டுகளாக
வெட்டிய கோவா, உள்ளி, இஞ்சி ஆகிய
வற்றை சேர்த்து தண்ணீர் விடாமல்
மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

அரைத்த பின்னர் வெங்காயம், பச்சை
மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை
பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைக்க
 வேண்டும் .

 அதன் பின்னர் அரைத்த மாவை எடுத்து
ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

பாத்திரத்தில் போட்ட அரைத்த மாவுடன்
பொடியாக நறுக்கி தட்டில் வைத்திருக்கும்
யாவற்றையும்  சேர்த்து கலந்துகொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாயகன்ற
பாத்திரத்தினை வைத்து (தாச்சியில் அல்லது
வாணலியில்)எண்ணெய் ஊற்றி அடுப்பில்
வைத்து சூடாக்க வேண்டும்.

எண்ணெய் சூடான பின்னர்   அரைத்து கலந்து
வைத்திருக்கும் மாவை சிறு உருண்டையாக
எடுத்து தட்டி துளையிட்டவும்

அதன் பின்னர் சூடான எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

வடைகள் பொன்னிறமாக பொரிந்த பின்பு
சுத்தமான சுவையான சத்தான கோவா
(கபேஜ்) வடை தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கோவா(கபேஜ்)
வடைகள் சிலவற்றை வைத்து அதனுடன்
விரும்பினால் சம்பல் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இருதய, சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.