இலங்கையில் பூப்பெய்தும் பெண்
குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி
சாப்பிட கொடுப்பது வழக்கம் உளுத்தங்
களியில் காபோவைதரேட், கொழுப்பு,
பொட்டாசியம், பொஸ்பரஸ், கல்சியம்,
விற்றமின் ஆகிய பலசத்துகள் அடங்கி
யுள்ளது. அத்துடன் உளுத்தங்களியை
கொடுப்பதால் அவர்களின் இடுப்பெலும்பு
வலுவாகும்.
தேவையான பொருட்கள்
வாசனை வரும்படி வறுத்தசிகப்பு அரிசிமா- 2 சுண்டு
தேங்காய் பால்- ஒன்று
சீனி (சர்க்கரை) - முக்கால் சுண்டு
ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
வாசனை வரும்படி வறுத்த உளுத்தம்மா - ஒரு சுண்டு
வறுத்த பாசிப்பருப்புமா (பயறு) - அரை சுண்டு
செய்முறை
1.அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
தேங்காய்பால், சீனி(சர்க்கரை)ஆகிய
வற்றைபோட்டு நன்றாக காய்ச்சவும்.
2.அதன்பின்பு அதில் அரிசிமா, உளுத்தம்மா,
பயறு (பயித்தம்மா) ஆகியவற்றை போட்டு
அடிப்பிடிக்காமலும் கட்டிபடாமலும் நன்றாக
கிண்டவும் (களி பதத்திற்கு).
3,அதன் பின்பு ஏலக்காய்த்தூள் போட்டு அதை
நன்றாக கிண்டவும்.
4.கிண்டிய களி தாட்சியில் ஒட்டாமல் திரளும்
பதத்தை அடைந்ததும் தாட்சியை அடுப்பில்
இருந்து இறக்கி களியை ஒரு பாத்திரத்தில்
போடவும். அதன் பின்பு அதை பரிமாறவும்.
குறிப்பு
அரிசிமா, உளுத்தம்மா, பயறு (பயித்தம்மா)
ஆகியவற்றைபோட்டு அடிப்பிடிக்காமலும்
கட்டிபடாமலும் நன்றாக கிண்டவும்
(களிபதத்திற்கு), கிண்டிய களி தாட்சியில்
ஒட்டாமல் திரளும் பதத்தை அடைந்ததும்
தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கி களியை
ஒரு பாத்திரத்தில் போடவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.