கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 30. Dezember 2010

மஞ்சள் நீராட்டு புட்டு

இலங்கையில் உள்ள பெண்குழந்தைகள்
பூப்பெய்தும் போது தினமும் மஞ்சள்
நீராட்டு புட்டை சாப்பிட கொடுப்பது
வழக்கம் அத்துடன் இப்புட்டை செய்து
தலையை சுற்றியும் தீட்டு கழிப்பதும்
 வழக்கம். இப் புட்டில்கார்போஹைட்ரேட்,
கொழுப்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ்,
கல்சியம், விற்ற மின் A B1, B2, B3, B4, B5,
 B9, B11 ஆகிய பல சத்துகள்
அடங்கியுள்ளது.


தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 500 கிராம்
வெல்லம் - 500 கிராம்
தண்ணீர் - 300 மி. லிட்டர்
தேங்காய் - ஒன்று
ஏலக்காய் - 5 கிராம்
உளுத்தம்மா - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
கொதிதண்ணீர் - தேவையானளவு
நெய் - 250 கிராம்


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை
நீரில் கழுவி சுத்தம் செய்து
அதில் உள்ள நீரை முழுவதும்
 வடித்து விடவும்.

அதன் பின்பு ஈரமான அரிசியை
கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
(அரைக்கும் மெஷினில் கொடுத்தும்
அரைக்கலாம்).

அரைத்த ஈரமான(பச்சை)மாவினை
தூய்மையான வெள்ளைத்துணியில்
கட்டி இட்லி தட்டில் வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை
 வைத்து அதனுள் பாத்திரத்தின் முக்கால்
அளவு தண்ணீர் விட்டு அதன் மேல் இட்லி
தட்டை வைத்து ஆவியில் வேகவிடவும்.

மா வெந்தவுடன் காய்ந்து இருக்கும்
(ட்ரையாக இருக்கும்). அதன் பின்பு வெந்த
மாவில் உப்பு, உளுத்தம்மா, கொதி தண்ணீர்
சேர்த்து அதை புட்டு பதத்திற்கு குழைக்கவும்
(சிறு சிறு உருண்டைகளாக).

குழைத்தமாவை நீத்து பெட்டியில் அல்லது
புட்டுகுழலில் (ஸ்டீமரில்) வைத்து நீராவியில்
அவிக்கவும்.

புட்டு அவிந்ததும் அதை இறக்கி ஒரு
பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்
(சூட்டுடன்).

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை
ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில்
தேங்காயை துருவி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு அதை நன்றாக
கரைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
அது சூடானதும் அதில் கரைத்த வெல்லத்தை
ஊற்றி பிசுக்கு பத பாகு காய்ச்சவும்.

பிசுக்கு பத பாகு பதம் வந்தவுடன் அந்த பாகில்
தேங்காய்துருவல், ஊறியகடலைப்பருப்பு,
ஏலக்காய்த்தூள் போட்டு கிளறவும்.

தேங்காய்துருவலில் உள்ள தண்ணீர் வற்றி
மறுபடியும் பிசுக்கு பதம் வந்தவுடன் பாகை
இறக்கவும்.

அதன்பின்பு வெந்தபுட்டுடன் நெய் விட்டு
அதனுடன் காய்ச்சிய பாகை சேர்த்து கிளறவும்.

இப்போது மஞ்சள் நீராட்டு புட்டு தயாராகி விட்டது.
 பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு பரிமாறவும்.



 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
வெந்தமாவில் உப்பு, உளுத்தம்மா, கொதிதண்ணீர்
சேர்த்து புட்டுபதத்திற்கு குழைக்கவும்(சிறுசிறு
உருண்டைகளாக).
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அது
 சூடானதும் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி
பிசுக்கு பத பாகு காய்ச்சவும்


 மாற்று முறை 
குழைத்தமாவை நீத்து பெட்டியில் அல்லது
புட்டுகுழலில் (ஸ்டீமரில்) வைத்து நீராவியில்
அவிக்கவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நோயுள்ள குழந்தைகளுக்கும்,
இருதயநோயுள்ள குழந்தைகளுக்கும்,
வைத்தியரின் ஆலோசனைப்படி பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.