கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 9. Januar 2011

கோல்டன் சிக்கின்கறி

கோல்டன் சிக்கன் மிக மிக
சுவையானதும் சத்துக்கள்
உடையதுமாகும்.

தேவையான பொருட்கள் 
கோழி - ஒரு கிலோ
எலுமிச்சம்பழம்(தேசிக்காய்) - 2
தக்காளி - 3
பால் - 2 கப்
எண்ணெய் - தேவையானளவு
இஞ்சி - ஒரு துண்டு
உள்ளி(பூண்டு) - 6 பல்
முட்டை - 3
கார்ன் ப்ளார் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை 
கோழியை சுத்தம் செய்து விரும்பியளவில்
வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் இஞ்சி, உள்ளி(பூண்டு)
ஆகியவற்றை அரைத்து இன்னொரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் கோழி உள்ள
பாத்திரத்தில் அரைத்த (இஞ்சி,உள்ளி
(பூண்டு))விழுது, உப்பு, தேசிக்காய்சாறு
(எலுமிச்சம்பழசாறு) ஆகியவற்றை
போடவும்.

அதன் பின்பு எல்லாவற்றையும்
ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

இக்கலவையை  ஒரு மணித்தியாலம்
ஊறவைக்கவும்.
(கோழித்துண்டுகள் பெரிய அளவில்
இருத்தால் முள்ளுகரண்டியால் கொஞ்சம்
குத்தி விடவும்).

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையின்
மஞ்சள் கருவை எடுத்து வைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் முட்டையின்
வெள்ளைக் கருவை எடுத்து வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் தக்காளிப்பழத்தை
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதை
 சூடாக்கவும்

அது சூடானதும் அதில் பட்டரை போடவும்.

அது உருகிய பின்பு அதில் கார்ன் ப்ளார்ரை
போடவும்.

அது லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.

அதன் பின்பு அதனுடன் பாலை சேர்த்து
 தடிப்பாக வரும் வரை கிளறவும்.

பின்பு இக்கலவைய அடுப்பிலிருந்து
இறக்கி இதை ஆறவிடவும்.

முட்டை மஞ்சள்கரு, உப்பு, மிளகுத்தூள்,
மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அதை ஆறிய கலவையுடன்
சேர்க்கவும்.

இவையாவற்றையும் கோழித்துண்டு
களுடன் சேர்த்து பிரட்டவும்.

இன்னொருபாத்திரத்தில் முட்டை
வெள்ளைகருவை நன்றாக அடித்து
அதில் கலவையாவும் பிரட்டிய
கோழித்துண்டுகளை ஒவ்வொன்றாக
நனைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
அதை சூடாக்கவும். அது சூடானதும் அதில்
எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் முட்டை வெள்ளைகரு
பிரட்டிய கோழித்துண்டுகளை போட்டு
பொரித்தெடுக்கவும்.

அதன் பின்பு இதை ஒரு கண்ணாடித்தட்டில்
அடுக்கி வெட்டிய தக்காளித் துண்டுகளை
அதன் மேலே பரப்பி அதை மேலே முட்டை
வெள்ளை கருவை ஊற்றி அதை மைக்ரோவேவ்
அவனில் வைத்து (10 - 15) நிமிடங்கள் பேக்
பண்ணவும்.

அதன் பின்பு அதை எடுத்து கொத்தமல்லி
இலை நறுக்கி போட்டு அலங்கரித்து
பரிமாறவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.