கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 25. Februar 2011

மசாலைத்தோசை

மசாலைத்தோசை சுவையானதும் சத்தானதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணகூடியதுமாகும். ஆகவே
இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை
அறியவும்.


தேவையானபொருட்கள் 
புழுங்கலரிசி - 2 கப்
பச்சரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கிழங்கு பிரட்டல் கறி - தேவையானளவு

செய்முறை 
1.ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 2 மணித்தியாலம் ஊற
 வைக்கவும்.

2.இன்னொரு பாத்திரத்தில் பச்சரிசி, தண்ணீர்
  ஆகியவற்றை கலந்து 2 மணித்தியாலம் ஊற
  வைக்கவும்.

3.மற்றைய பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,
   வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றை கலந்து
  15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

4.ஊறிய உளுத்தம்பருப்பு, வெந்தயம், தண்ணீர்
   ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)
    போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.

5.அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
   போடவும்.

6,அதன் பின்பு ஊறவைத்த பச்சரிசி, தண்ணீர்
    ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)
   போட்டு நைசாக அரைக்கவும்.

7.அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
   போடவும்.

8.பின்பு ஊறவைத்த புழுங்கல் அரிசி, தண்ணீர்
   ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)
   போட்டு நைசாக அரைக்கவும்.

9.அரைத்த பின்பு எடுத்து பச்சரிசிமா போட்ட
   பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.

10.பின்பு ஊறவைத்த  உளுந்து வெந்தயம்
     தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
   (மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்

11.பின்பு அதனுடன் அரைத்த உளுந்து வெந்தயம்
  போட்டு கலந்து புளிக்க வைக்கவும்.

12.அடுத்த நாள் அதற்கு உப்பு போட்டு கலக்கவும்.

13.பின்பு அடுப்பில் தோசைக்கல்லைவைத்து
    அதை சூடாக்கவும்.

14.தோசைக்கல் சூடானதும் அதற்கு சிறிதளவு
     நல்லெண்ணெய் ஒருதுணியில் எடுத்து அதை
    தோசைக்கல்லில் தடவும்.

15.பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
    தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தடவி
   தோசையை வேகவிடவும்.

16.தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன்
    மேல் கிழங்குபிரட்டல்கறியை வைத்து
   அதன் இருபக்கமும் மடித்து அதை திருப்பி
   போட்டு வேகவிடவும்.

17.தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து
    ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

18.இதே போல மற்றைய தோசைகளை சுட்டு
    முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
     வைக்கவும்.

19.அதன் பின்பு ஒரு தட்டில் தேவையான
     மசாலைத்தோசைகளை  வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
உளுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் -
தோசை குளிர்மையானது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.