கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 19. Februar 2011

கத்தரிக்காய் பொரியல்

கத்தரிக்காய் கூடுதலாக கொலஸ்ட்ரோலின் அளவைக்
கட்டுப்படுத்தஉதவும் கத்தரிக்காயைசாறுபிழிந்து எடுத்து
காலின் வீக்கத்தைகுறைப்பதற்கு பூசிக் கொள்வார்கள்
அத்துடன் வியர்வையை தடைசெய்ய கத்தரிக்காயைசாறு
பிழிந்து எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும்
பூசுவார்கள் கத்தரிக்காய் போஷாக்குநிறைந்த உணவாகை
யால் ஏழைகளின்இறைச்சி என்று கூட சொல்வார்கள்.
கத்தரிக்காயில் நீர், புரதம், கல்சியம், கார்போஹைட்ரேட்,
நார்த்தன்மை, பொஸ்பரஸ், கொழுப்பு, விற்றமின் B1, B2, C,
அயன் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட
கத்தரிக்காயில் செய்யப்பட்ட பொரியலில் மேற்குறிப்பிட்ட
சகல சத்துகளுடன் உள்ளி(பூண்டு), உப்பு, மிளகு, ஒலிவ்,
லெமென் அகியவற்றின் சுவையும் சேர்ந்து மிகமிக சுவை
யாக காணப்படும். அத்துடன் இது செய்வதிற்கு இலகு
வானதும் ஆகும் கத்தரிக்காய் பொரியலை ஜெர்மனிய
மக்கள்விரும்பி உண்பார்கள். இதன் சுவையை இதனை
செய்து பார்த்து அறியவும். 

தேவையான பொருட்கள் 
கத்தரிக்காய் (பெரிது) - 2
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
உள்ளி (பூண்டு )- (2 - 3) பல்
ஒலிவ் எண்ணெய் - 2 கப்
லெமென் சாறு - 2
சிறிதுசிறிதாகவெட்டிய கறிவேப்பிலை- தேவையானளவு


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில்
கத்தரிக்காயை போட்டு நன்றாக கழுவவும்.

கழுவிய கத்தரிக்காயினை ஒரு துணியால்
நன்றாக துடைக்கவும்.

துடைத்த பின்பு ஒரு பலகையில் கத்தரிக்காயை
வைத்து ஓரளவு தடிப்பான வட்டமாக வெட்டவும்.

ஓரளவு தடிப்பான வட்டமாக வெட்டிய கத்தரிகாயில்
ஒரு துண்டை எடுத்து அதன் வெள்ளைநிற பாகத்தில்
கத்தியால் குறுக்கு குறுக்காக பல கோடுகளை
ஒரளவு ஆழத்திற்கு கீறவும்.

கோடுகள் கீறிய பின்பு அதில் உப்புத்தூள் மிளகுத்தூள்
ஆகியவற்றை தூவவும் (கத்தரிக்காயில் உப்புத்தூள்
மிளகுத்தூள் நன்றாக தூவப்பட்டிருக்க வேண்டும்).

தூவிய பின்பு இதனை ஒரு தட்டில் வைக்கவும்.

ஒரு பலகையில் உள்ளியை(பூண்டு) வைத்து அதனை
கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நன்றாக வெட்டவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து
அதில் ஒலிவ் எண்ணெயை ஊற்றி அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் வெட்டி வைத்துள்ள
உள்ளியை(பூண்டினை) போட்டு அதில் உள்ள சாறு
வெளியே வருமாறு நன்றாக கரண்டியால் நசிக்க
வேண்டும்.

உள்ளி(பூண்டு)  ஓரளவு பொரிந்ததும் அதில் உப்புத்தூள்
மிளகுத்தூள் பூசிய கத்தரிக்காயை போட்டு நன்றாக
கலந்து பொரிக்கவும்.

கத்தரிக்காயை நன்றாக பொரித்த பின்பு அதன் மேல்
லெமென் சாறினை பிழிந்து அதை தூவி 2 நிமிடங்களின்
பின்பு கத்தரிக்காய் பொரியலை தாட்சியில்(வாணலி
யில்) இருந்து எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறியசிறிய துண்டுகளாக வெட்டிய கறிவப்பிலையை
தூவி அலங்கரிக்கவும்.



எச்சரிக்கை 
கத்தரிக்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.