மசாலா சிக்கன் நுகற்ஸ் வித்தியாசமான
சுவையுடையது. அத்துடன் இதை
எல்லோரும் விரும்பி உண்பார்கள். இதில்
புரதச்சத்து(Protein), கார்போவைதரேட்,
சக்தி(Energy), ஈரப்பதம்/நீர்(Moisture), கொழுப்பு
(fat), தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ் Phosporous), ரைப்போஃப்ளேவின்
(Riboflavin), ஃபோலிக்கமிலம் (Folicacid),
விற்றமின்(vittamin) ஆகிய சத்துகள் அடங்கி
யதும் ஆகும் அத்துடன் சுவையானது
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணக்கூடிய ஓர் சிற்றுண்டி
ஆகும். ஆகவே இதனை செய்து உண்ணவும்
முட்டை - (4 - 5)சுவையுடையது. அத்துடன் இதை
எல்லோரும் விரும்பி உண்பார்கள். இதில்
புரதச்சத்து(Protein), கார்போவைதரேட்,
சக்தி(Energy), ஈரப்பதம்/நீர்(Moisture), கொழுப்பு
(fat), தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ் Phosporous), ரைப்போஃப்ளேவின்
(Riboflavin), ஃபோலிக்கமிலம் (Folicacid),
விற்றமின்(vittamin) ஆகிய சத்துகள் அடங்கி
யதும் ஆகும் அத்துடன் சுவையானது
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணக்கூடிய ஓர் சிற்றுண்டி
ஆகும். ஆகவே இதனை செய்து உண்ணவும்
தேவையானபொருட்கள் .
கோழி (முள்ளில்லாதத்தசைப்பகுதி) - 1கிலோரஸ்க்தூள்(காய்ந்த பாண்தூள்) - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - அரைத்தேக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - மிகமிகசிறியதுண்டு
உள்ளி - ஒரு பல்
தயிர் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பலகையில் கோழியின் முள்ளில்லாத
தசைப்பகுதியை வைத்து கூர்மையான
கத்தியினால் (விரும்பிய வடிவில் அல்லது
விரும்பிய உருவத்தில் ) விரும்பிய
அளவில் துண்டுகளாக வெட்டவும் .
ஒரு பாத்திரத்தில் வெட்டியதுண்டுகள்,
அரைகால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை
போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.
நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு
அதிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்த
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டைவெள்ளைக்கரு,
உப்பு ஆகியவற்றை எக்பீட்டரினால் நன்றாக
நுரைக்கும்படி அடித்து வைக்கவும்.
கிரைண்டரில்(மிக்ஸியில்) முட்டைமஞ்சள்கரு,
மிளகாய்த்தூள், மெட்ராஸ்கறித்தூள்,
கறிவேப்பிலை, இஞ்சி, உள்ளி தயிர், வினிகர்
அகியவற்றை போட்டு நன்றாகவும் ஒரளவு
தடிப்பாகவும் அடித்தெடுக்கவும்.
பின்பு வெட்டிய கோழி இறைச்சி உள்ள
பாத்திரத்தில் கிரைண்டரில் அடித்தவற்றை
ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும்.
பின்பு ஒரு வாய் அகண்ட தட்டில் (உணவு
உட்கொள்ளும் தட்டு) காய்ந்தபாண்தூளை
(ரக்ஸ்தூள்)போட்டு பரப்பவும்.
அதன் பின்பு ஊறிய கோழியிறைச்சி துண்டு
ஒன்றை எடுத்து அதனை முட்டை வெள்ளை
க்கருவில் நனைக்கவும்.
முட்டையில் நனைத்த துண்டை ரக்ஸ்தூள்
(காய்ந்த பாண்தூள்) உள்ள தட்டில் போட்டு
நன்றாக ரக்ஸ் தூளை கோழியிறைச்சியில்
பிரட்டவும் (ரக்ஸ்தூளினால் கோழியின்
எல்லா பக்கமும்(கோழி இறைச்சி வெளியில்
தெரியாதவாறு) நன்றாக மூடும்படி).
ரக்ஸ் தூள் பிரட்டிய கோழியிறைச்சி துண்டை
கவனமாக (கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்
தூள் விழுந்து விடாமல்) எடுத்து அதனை
ஒரு தட்டில் வைக்கவும்.
இதனைப்போல எல்லா கோழித்துண்டு
களுக்கும் செய்து முதலில் கோழித்
துண்டினை வைத்த தட்டில் வைக்கவும்.
இந்த கோழித்துண்டுகளை (5 - 10) நிமிடங்கள்
அப்படியே காய வைக்கவும் (இல்லாவிட்டால்
கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள் இதனை
எண்ணெயில் பொரிக்கும் போது
கோழியிறைச்சியை விட்டு பிரிந்து விடும்).
அதன் பின்பு இதனை ஒரு பாத்திரத்தில்
வைத்து காற்று போகாதவாறு நன்றாக மூடி
அல்லது பாலித்தீன் (ஆயில் தாள்) தாளில்
அல்லது பாலித்தீன் பையில் போட்டு
நன்றாக மூடிக்கட்டவும்.
மூடிக்கட்டிய பின்பு இதனை ப்ரீசரில்
வைக்கவும் (தேவையான அளவுகளில்
பல பைகளிள் போட்டு நன்றாக மூடி கட்டி
வைக்கலாம் இதில் திறக்காமல் இருக்கும்
பையில் உள்ள கோழித்துண்டுகள்
3 மாதங்கள் வரை பழுதடையாமல் வைத்து
உண்ணலாம்).
மசாலா சிக்கின் நுகற் தேவையான
நேரங்களில் இதிலிருந்து தேவைப்படும்
பைகளை எடுத்து அதனை திறந்து அதனை
ஒரு தட்டில் வைத்து அதனை சிறிது நேர
ம் அப்படியேவைத்து குளிர் இல்லாமல்
செய்யவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி)
வைத்து தாட்சி(வாணலி) சூடானதும்
தேவையானளவு எண்ணெய் விட்டு
அதை சூடாக்கவும் எண்ணெய் சூடானதும்
மசாலா சிக்கின் நுகற்ஸை போட்டு
பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும்
(நுகற்ஸ் குளிருடன் இருந்தால் அதன்
உள்ளிருக்கும் கோழிறைச்சி பொரியாது).
நன்றாக பொரிந்த பின்பு இதனில் உள்ள
எண்ணெயை வடித்து விட்டு ஒரு
பாத்திரத்தில் போட்டு அதனை ஒரு
மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
சிறிது நேரத்தின் பின்பு சுவையான
சத்தான மசாலா சிக்கன் நுகற்ஸ் தயாராகிவிடும்.
பின்பு ஒரு தட்டில் மசாலா சிக்கன் தக்காளிபழ
சாஸ், பொம்பிரீட்ஸ் ஆகியவற்றை வைத்து
பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய விசயங்கள்
மசாலா சிக்கன் நுகற்ஸ் செய்து காய
வைத்தவுடனும் இதனை பொரிக்கலாம்.
மாற்று முறை
எல்லா இறைச்சிவகையிலும் இதனை
செய்யலாம் மற்றைய இறைச்சி
வகைகளில் செய்யும் போது கூடியளவு
வினிகர் சேர்க்கவும் (வினிகர் சேர்த்தால்
தான் மற்றைய இறைச்சி வகைகள் மிக
விரைவாக பொரியும் எல்லாவிட்டால்
இறைச்சி பொரியும் போது ரக்ஸ்தூள்
கருகிவிடும்).
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.