கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 10. April 2011

மசாலா காலிஃப்ளர் மஞ்சூரியன்

   மசாலா காலிஃப்ளவர் மஞ்சூரியன்
 சுவையானதும் சத்துகள் நிறைந்ததும் 
எல்லோராலும் விரும்பக்கூடியதும் 
ஆகும்.



தேவையான பொருட்கள் 

காலிஃப்ளவர் -1
முட்டை - தேவையானது 
மிளகாய்த்தூள் - (1 - 3) tsp
மஞ்சள் தூள் - (1/2+1/2) 1 tsp
மெட்ராஸ் கறித்தூள் - 1 /4 tsp
உப்பு - தேவையானளவு
கடுகு - தேவையானளவு 
பெருஞ்சீரகம் (சோம்பு ) - 1tsp
பெரிய நறுக்கிய வெங்காயம் - 1
மாசிக்கருவாட்டுத்தூள் - சிறிதளவு 
எண்ணெய் - 2 Tsp
உள்ளி (பூண்டு) - 2 பல்
இஞ்சி (மிகமிகசிறியளவு) -1
கறிவேப்பிலை - சிறிதளவு
அஜினோமோட்டோ - 1 /4tsp
பச்சைமிளகாய் (சிறியதுண்டுகள்) - 1
கொதிநீர் - தேவையானளவு

செய்முறை 

1 )காலிஃப்ளவரை மிகமிக சிறிய 
    பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். 
   பின்பு ஒரு பாத்திரத்தில் கொதிநீர் 
   விட்டு அதில் சிறிதளவு உப்பு, 
   சிறிதளவு மஞ்சள்தூள், நறுக்கிய 
   காலிஃப்ளவர் பூக்கள் ஆகியவற்றை 
  போட்டு நன்றாக கலந்து வடிகட்டி 
  எடுத்து கொள்ளவும்.(காலிஃப்ளவரை 
   நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் 
  வடித்துவிட்டு).

2 )வடிகட்டி எடுத்த காலிஃப்ளவரை 
   ஒரு தட்டில்(மைக்ரோவேயில்
   வைக்ககூடியது) போட்டு வைக்கவும்.

)காலிஃப்ளவர் உள்ள தட்டினை 
 மைக்ரோவேயில் வைத்து நன்றாக 
 க்ரில் பண்ணவும் (காலிஃப்ளவரி
 லிருக்கும் தண்ணீர் வற்றி 
 காலிஃப்ளவர் சுருங்கி பொன்னிறமாக 
 வரும்வரை க்ரில் பண்ணவும்).

3)காலிஃப்ளவர் சுருங்கி பொன்னிறமாக 
  வந்த பின்பு காலிஃப்ளவர் போட்ட 
  தட்டினை மைக்ரோவேயில் இருந்து 
 வெளியே எடுத்து அதனை நன்றாக 
 ஆற விடவும்.

4)பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) 
   வைத்து சூடாக்கிய பின்பு அதில் சிறிதளவு 
   எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

5)எண்ணெய் சூடானதும் அதில் கடுகை 
   போட்டு வெடித்ததும் அதில் பெருஞ்சீரகம்
  (சோம்பு ), நறுக்கிய வெங்காயம், நறுக்கிய
  பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு) நறுக்கிய 
  இஞ்சி ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

6)இவை தாளித்த பின்பு அதில் சுருங்கி 
   பொன்னிறமாக வந்த காலிஃப்ளவரை 
  போட்டு நன்றாக வதக்கவும்.

7)காலிஃப்ளவர் வதங்கியதும் அதில் மிக மிக 
   சிறியளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், 
   மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு 
  நன்றாக கலந்து வதக்கவும் (தூள்மணம் 
  இல்லாமல்).

8)வதங்கியதும் அதில் மாசிக்கருவாட்டுத்தூள் 
   போட்டு நன்றாக வதக்கவும்.

9)வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து 
  ஊற்றி கிளறி விடவும். கிளறி விட்ட பின்பு 
  இதனுடன் உப்பு, சிறிது சிறிதாக நறுக்கிய 
  கறிவேப்பிலை, அஜினோமோட்டோ 
  ஆகியவற்றை கலந்து நன்றாக கிளறி 2 
  நிமிடங்கள் அப்படியே விடவும் .

10)2 நிமிடங்களின் பின்பு அடுப்பிலிருந்து 
     தாட்சியை(வாணலியை) இறக்கி 
   அதிலிருக்கும் மசாலா காலிஃப்ளவர் 
    மஞ்சூரியனை ஒரு பாத்திரத்தில் போடவும்.

11)பின்பு சோற்றுடனோ(சாதத்துடனோ) 
     அல்லது பாண், புட்டு, இடியப்பம் இவற்றில்
     ஏதாவது ஒன்றுடன் சேர்த்து பரிமாறலாம்.


குறிப்பு 
  
    tsp- தேக்கரண்டி ,Tsp- மேசைக்கரண்டி 

1)இருதய நோயாளர், காலிஃப்ளவர் அலர்ஜி 
    உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி 
    உண்ணவும். 

2)அஜினோமோட்டோ, மெட்ராஸ் கறித்தூள், 
     மாசிக்கருவாட்டுத்தூள் விரும்பினால் 
    சேர்க்கலாம், காலிஃப்ளவரிலிருக்கும் 
    தண்ணீர் வற்றி காலிஃப்ளவர் சுருங்கி 
    பொன்னிறமாக வரும்வரை க்ரில் பண்ணவும்.

3)மைக்ரோவேயில்லாதவர்கள் அடுப்பில்
   தாட்சியை(வாணலியை)வைத்து 
   சூடாக்கிய பின்பு நன்றாக கழுவி தண்ணீர் 
  இல்லாமல் வடித்த காலிஃப்ளவரை போட்டு 
  நன்றாக வறுக்கவும்(வெறும் தாட்சியில்
  (வாணலியில்)போட்டு வறுக்கவும்).

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.