கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 25. April 2011

முறுகல் தோசை

தோசை சுவையானதும் சத்தானதும்சிறுவர்கள்முதல்
பெரியவர்கள் வரைவிரும்பி உண்ணகூடியதும் ஆகும்
ஆகவே இதை செயது சாப்பிட்டுஇதன்சுவையை அறியவும்


தேவையான பொருட்கள் 
புழுங்கலரிசி - 2 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 /2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
தண்ணீர் - தேவையானளவு

 செய்முறை 
(1 )பாத்திரம் ஒன்றில் புழுங்கல்அரிசி,பச்சையரிசி,
     தண்ணீர் ஆகியவற்றை கலந்து இரண்டு மணித்
    தியாலம்  ஊற வைக்கவும்.

(2 )இன்னொருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,வெந்தயம்,
      தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15நிமிடங்கள் ஊற
     வைக்கவும்.

 (3 )இவையாவும் ஊறியபின்பு ஊறிய உளுத்தம் பருப்பு,
      வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்
      (மிக்ஸியில்) போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.

(4 )அரைத்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
     போடவும்.

(5 )பின்பு ஊறவைத்த புழுங்கல்அரிசி,பச்சரிசி,தண்ணீர்
     ஆகியவற்றை கலந்து கிரைண்டரில் (மிக்ஸியில்)
      போட்டு நைசாக அரைக்கவும்.

(6 )பின்பு அதை எடுத்து முதலில் வெந்தயம் உளுந்து
     அரைத்து போட்டு வைத்துள்ளபாத்திரத்தில் போடவும்.

 (7 )பின்பு அரைத்து பாத்திரத்தில் போட்டு வைத்திருக்கும்
      யாவற்றையும் புளிக்கவைக்கவும்.

(8 )அடுத்த நாள் உப்பு,மஞ்சள்தூள் போட்டு நன்றாக
     கலக்கவும்.

 (9 )அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை(வாணலியை)
      வைத்து சூடாக்கவும்.

(10 )தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒருதுணியில்
       (அல்லது ஒரு சிறிய உருளைக்கிழங்கினை பாதியாக
      வெட்டி அதன்தோல்பாகத்தில் முள்ளுக்கரண்டியை
      செருகவும் )சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
      எடுத்து அதை அதனை தோசைக்கல்லில் தடவும்.

(11 )அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள மாவில்
        ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி
        அதனை நன்றாக கரண்டியால் தடவி தோசையை
       வேகவிடவும்.

 (12 )ஒரு பக்கம் வெந்த பின்பு அதை திருப்பி போட்டுவேக
        விடவும்.

(13)தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்தபின்பு அதை
      எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

(14)அதன் பின்பு சுவையான சத்தான முறுகல் தோசை
     தயாராகிவிடும்.
   
(15)அதன் பின்பு தயாரான முறுகல் தோசையை எடுத்து
    ஒரு பாத்திரத்தில் வைக்கவும் .

 (16)இதேபோல மற்றைய முறுகல் தோசைகளையும்
       சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
       வைக்கவும்.

 (17)ஒருதட்டில் தேவையானளவு முறுகல் தோசைகளை
       வைத்து அதனுடன் சட்னி,சம்பல் குழம்பு, சாம்பார்
      இவற்றில் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையும்
     வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை
உழுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஆயத்த நேரம்
( 1 - 2 ) மணித்தியாலம்

சமைக்கும் நேரம் -
1மணித்தியாலம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.