கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 14. April 2011

மாம்பழ பனீர் லட்டு

மாம்பழ பனீர் லட்டு சுவையானதும் சத்துகள் 
நிறைந்ததும் எல்லோராலும் விரும்பி 
உண்ணக்கூடியதுமாகும். 


தேவையானபொருட்கள்

    நன்கு பழுத்த இனிப்பானமாம்பழம் - 2
    துருவிய)பனீர்- கால் கிலோ
    ஏலாக்காய்த்தூள்- கால் தேக்கரண்டி
    சீனி(சர்க்கரை)தூள் - தேவையானளவு
    செர்ரிப்பழம் - 12
      செய்முறை

      ஒரு பாத்திரத்தில் சீனி(சர்க்கரை)தூள், துருவிய 
      பனீர் ஆகியவற்றை விரல்களால் நன்கு பிசைந்து 
      வைக்கவும்.
        பின்பு பிசைந்து வைத்த கலவையுடன் ஏலாக்காய்
        த்தூளையும் போட்டு பிசையவும்.
          பிசைந்த பின்பு இக்கலவை உருண்டை பிடிக்கும் 
          பதத்தில் இருக்க வேண்டும்.
            இதனை பன்னிரெண்டு உருண்டைகளாக 
            பிடிக்கவும்.
              மாம்பழத்தின் தோலை சீவி அதன் தேவையற்ற 
              பகுதிகளை அகற்றவும். 


              பின்பு அதன் சதைப்பகுதியை பன்னிரெண்டு 
              உருண்டை வடிவத்துண்டுகளாக வெட்டி 
              எடுக்கவும்.
                பின்பு அந்த துண்டுகளை உருட்டி வைத்திருக்கும் 
                பனீர், சீனி(சர்க்கரை)உருண்டைக்குள்வைத்து 
                மூடி லட்டு வடிவில் உள்ள உருண்டைகளாக 
                உருட்டவும்.
                  இப்படியே எல்லா உருண்டைகளையும் உருட்டவும். 


                  உருட்டிய பின்பு ஒவ்வொரு உருண்டையின் மேல் 
                  ஒவ்வொரு செர்ரிபழங்களை மெதுவாக அமர்த்தி 
                  வைக்கவும்.
                    அதன் பின்பு இவையாவற்றையும் ஒரு தட்டில்
                     வைக்கவும். 


                    வைத்த பின்பு இத்தட்டினை குளிர்சாதனப் 
                    பெட்டியில் (2 - 3) மணித்தியாலம் வைத்து 
                    குளிரூட்டவும்.
                      குளிரூட்டிய பின்பு சுவையான மாம்பழ பனீர்
                       லட்டு தயாராகிவிடும்.


                       அதன் பின்பு இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து 
                      பரிமாறவும்.

                      எச்சரிக்கை 
                      சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோச
                      னைப்படி உண்ணவும். 

                      Keine Kommentare:

                      Kommentar veröffentlichen

                      Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.