கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 20. April 2011

பேரீச்சம்பழ அல்வா

இனிப்பு சுவையை உடையதும் இரும்புசத்து
கார்போஹைட்ரேட் சீனிச்சத்து, நார்சத்து,
கொழுப்பு புரோட்டின் நீர்சத்து, விற்றமின்
C, மக்னீஸியம் ஆகிய சத்துகள் நிறைந்தது
மருத்துவ குணம் உடையது சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
கூடிய,பழமே பேரீச்சம்பழம் ஆகும். இப்படிப்
பட்ட பேரீச்சம்பழத்துடன் புரோட்டீன் விற்ற
மின் கல்சியம் கார்போஹைட்ரேட் சீனிசத்து
கொழுப்பு, நீர்சத்து, விற்றமின் A B1 B2 B12 D
மக்னீஸியம், பொட்டாஷியம் அகிய சத்துகள்
அடங்கிய பால் நெய் சத்துகள் அடங்கிய நெய்
 பலசத்துகள் உள்ள முந்திரி(cashew nut)குங்கும
ப்பூ ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட
பேரீச்சம்பழ அல்வா பல சத்துகளுடன் மிக
மிக சுவையானதும் ஆகும். இதன் சுவையை
அறிய இதனை செய்து சாப்பிட்டு பார்த்து
அறியவும். இது 18ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கபட்டதாக வரலாறு கூறுகிறது.


தேவையானபொருட்கள் 
பேரீச்சம்பழம் (விதைநீக்கிபொடியாகநறுக்கிய) - ஒரு கப்
சீனி(சக்கரை) - ஒரு கப்
நெய் - ஒரு கப்
பால் - அரை கப்
பாதாம்பருப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு
வெந்நீர் (சுடுதண்ணீர்) - (1 - 1+1/2) கப்


செய்முறை 

முதல் நாள் இரவு ஒருபாத்திரத்தில்
பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன்
வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு
ஊற வைக்கவும். (பேரீச்சம்பழத்தின்
அளவை விட சிறிதளவு அதிகமாக
வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு
 (4 - 6மணித்தியாலம்) நன்றாக ஊற
விடவும்.

அதாவது பேரீச்சம்பழம் முழுவதும்
வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்க
வேண்டும்).

பேரீச்சம்பழம் ஊறிய பின்பு
கிரைண்டரில்(மிக்ஸியில்) ஊறிய
 பேரீச்சம்பழம், பால் ஆகியவற்றை
போட்டு நன்றாக அரைக்கவும்.

ஒரு தட்டு முழுவதற்கும் சிறிதளவு
பட்டரை அல்லது நெய்யை பூசி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் சீனி(சர்க்கரை),
தண்ணீர் ஆகியவற்றை போட்டு பாகு
காய்ச்சவும்.

சீனி(சர்க்கரை) இளம்பாகு பதத்தை
அடைந்ததும் அதனுள் அரைத்து
வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது,
நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக
மரஅகப்பையால் அல்லது கரண்டியால்
கிளறவும்.

அதன் பின்பு இதனுடன் முந்திரி குங்குமப்பூ,
பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டு
நன்றாக மரஅகப்பையால் அல்லது
கரண்டியால் கிளறவும்.

இவையாவும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில்
ஒட்டாத பதத்தை அடைந்ததும் பேரீச்சம்பழ
 அல்வா தயாராகி விட்டது.

பின்பு தயாரான பேரீச்சம்பழ அல்வா உள்ள
 தாட்சியை (வாணலியை)அடுப்பிலிருந்து
இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில்
(வாணலியில்) உள்ள பேரீச்சம்பழ
அல்வாவை பட்டர் அல்லது நெய் பூசிய
தட்டில் போடவும்.

தட்டில் போட்ட பின்பு பேரீச்சம்பழ
அல்வாவை நன்றாக பரப்பி விடவும்.

பின்பு அதன் மேல் கத்தியால் விரும்பிய
வடிவங்களில் அத்துடன் வெட்டக்கூடிய
ஆழத்திற்கு கோடுகளை போடவும்.

இவையாவற்றையும் செய்த பின்பு
பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக
ஆற விடவும்.

இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு
போட்ட இடங்களில் கத்தியால் வெட்டி
எடுக்கவும்.

தேவையான அளவு வெட்டி எடுத்த
பேரீச்சம்பழ அல்வா துண்டுகளை
ஒருதட்டில் விரும்பியவடிவத்தில்
வைத்து அடுக்கவும்.

அதன் பின்பு தட்டி உள்ள பேரீச்சம்பழ
அல்வாவை பரிமாறவும் .

எச்சரிக்கை 
பேரீச்சம்பழம் அலர்ஜியுடையவர்கள்,
சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர்
 ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
(பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு
அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு
(4 - 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும்.
அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின்
உள்ளே தாழ்ந்து இருக்க வேண்டும்)

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.