கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 11. April 2011

துபாய் பூசணிக்காய் கறி

துபாய்பூசணிக்காய் கறி சுவையானது
செய்வதற்கு இலகுவானது. கார்போஹைட்ரேட்,
நார்ச்சத்து, கொழுப்பு புரோட்டீன், விற்றமின் A,B1 
,B2,B3,B5,B9,C9,E, மினரல், கரோட்டீன், கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ், பொட்டாசியம்,
சோடியம் ஆகிய பல சத்துகள் அடங்கியது. 


தேவையான பொருட்கள் 
துபாய் பூசணிக்காய் (பெரியது) - ஒன்று
நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)- அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - (2 - 3) மேசைக்கரண்டி
வெட்டியகறிவேப்பிலை( - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - அரைப்பாதி
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உள்ளி(பூண்டு வெட்டியது) - 2 பல்
இஞ்சி (விழுது) - சிறிதளவு
பால் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழச்சாறு) - சிறிதளவு

செய்முறை 
துபாய் பூசணிக்காயின் தேவையற்ற
பகுதிகளை அகற்றி விட்டு அதனை
இரு பலகையில் வைத்து ஓரளவு
பெரிய பெரிய துண்டுகளாக
வெட்டவும்.

அதை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில்
 வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய்
 ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப்
போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய
வெங்காயத்தை போட்டு பொரிய விடவும்.

வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில்
 பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய பச்சை
மிளகாய், நறுக்கிய உள்ளி(பூண்டு),இஞ்சி
விழுது ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனுடன் வெட்டி கழுவிய
துபாய் பூசணிக்காய் துண்டுகளை அதில்
போட்டு வதக்கவும்.

ஓரளவு வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள்,
 மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை
 போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.

பூசணிக்காய் ஓரளவு அவிந்ததும் அதனுடன்
பால், கறிவேப்பிலை, உப்பு, அஜினோமோட்டோ
ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் அவியவிடவும்.

பின்பு அதனுடன் தேசிக்காய்சாறு(எலுமிச்சம்
பழச்சாறு) விட்டு நன்றாக கலந்து சிறிது நேரத்தின்
பின்பு சுவையான துபாய் பூசணிக்காய் கறி
தயாராகி விடும்.

பின்பு துபாய் பூசணிக்காய் கறி உள்ள பாத்திரத்தை
அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில்
 போட்டு வைக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்)பாண், இடியப்பம்
பிட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் இக்
கறியை வைத்து பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
பூசணிக்காயை நன்றாக கரண்டியால் கலக்ககூடாது.
கறியில் பூசணிகாய்த் துண்டுகள் ஓரளவு காணப்பட
வேண்டும். நிறைய நேரம் அவிய விடக்கூடாது
நிறைய பால் விடக்கூடாது.


மாற்று முறை 
நிறைய பால் விட்டு நன்றாக குழைந்த
பதமாகவும் செய்யலாம் மிளகாய்த்தூள்
மெட்ராஸ் கறித்தூள் போடாமலும்
 செய்யலாம்.


எச்சரிக்கை 
பூசணிக்காய் அலர்ஜி உள்ளவர்கள்,
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.