கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 21. April 2011

சிக்கின் சூப்

சிக்கன்சூப் உடல்வலியை தீர்க்ககூடியதும்,
 மழை, குளிர் காலங்களுக்கும் ஏற்றதும்
சுவையானதும் சக்தி(Energy) ஈரப்பதம்/நீர்
Moisture), புரதம்(Protein), கொழுப்பு(Fat),
தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளே
வின்(Riboflavin), போலிக் அமிலம்(Folic acid)
ஆகிய சத்துகள் நிறைந்ததும் ஆகும்.
ஆகவே இதில் உள்ள சத்துகளையும்
சுவையையும் அறிய சிக்கன் சூப்பை
செய்து சாப்பிட்டு அறியவும்.

தேவையானபொருட்கள் 

சிக்கன் (வெட்டி சுத்தம் செய்ததுண்டுகள்) - 250 கிராம்
பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சின்னசீரகம்(சீரகம்) - ஒரு தேக்கரண்டி
மல்லி(தனியா) - ஒரு தேக்கரண்டி
செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 4 பற்கள்
சின்னவெங்காயம் - 2
தக்காளிப்பழம் - ஒன்று
கருவப்பட்டை(பட்டை) - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்முறை 

ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு,
தண்ணீர், ஆகியவற்றை போட்டு
நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில்
சுத்தமாக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு
அதன் மேல் மோரை விடவும்.

இதில் உள்ள மோர் கலவையினால்
சிக்கனை நன்றாக கழுவவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கவும்.

 தாட்சி(வாணலி)சூடானதும் அதில் சின்ன
சீரகம்(சீரகம்), மல்லி(தனியா), செத்தல்
மிளகாய்(காய்ந்தமிளகாய்) கடலைப்பருப்பு,
மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக
வறுக்கவும்.

நன்றாக வறுத்த பின்பு அதில் வெந்தயத்தை
போட்டு கலக்கவும்.

கலந்த பின்பு இறக்கி ஒரு பாத்திரத்தில்
போட்டு ஆறவிடவும்.

இவையாவும் ஆறிய பின்பு இதனை
கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு
மாவாக்கவும் (பவுடராக்கவும்).

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி
(வாணலி) சூடானதும் அதில் அரை
தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் மோரில் கழுவிய
சிக்கனை போட்டு வதக்கவும்.

வதக்கிய சிக்கனுடன் நறுக்கிய தக்காளிப்
பழம், சின்ன வெங்காயம், உள்ளி(பூண்டு),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
 நன்றாக கலக்கவும்.

பின்பு இவற்றுடன் மாவாக்கியவற்றை
(பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக
கலக்கவும்.

கலந்த பின்பு இதனுடன் (2-3) டம்ளர்
தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு
இவையாவற்றையும் நன்றாக
வேகவிடவும்.

பின்பு அடுப்பில் இன்னொரு தாட்சியை
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு), கருவப்பட்டை(பட்டை),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
 தாளிக்கவும்.

தாளித்த பின்பு இவற்றை சிக்கனில் போட்டு
கலக்கவும்.

அதன் பின்பு அதனை இறக்கி வைத்துவிடவும்.

தாட்சியை(வாணலியை)இறக்கிய பின்பு
சுவையான, சத்துகள் நிறைந்த சிக்கன் சூப்
தயாராகிவிடும்.

சிக்கன் சூப் தயாராகிவிட்ட பின்பு இதனை
சூப் பரிமாறும் கோப்பையில் ஊற்றி
பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.