கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 18. April 2011

கச்சான் அல்வா


கச்சான் (வேர்க்கடலை,நிலக்கடலை)
அல்வா சுவையானது  கொழுப்பு,
கார்போஹைட்ரேட் போன்ற பல
சத்துகள் உடையது  சிறுவர்கள் முதல்
 பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
க்கூடியதும் ஆகும்.

தேவையான பொருட்கள் 
கச்சான் (வறுத்து சுத்தம்செய்துபாதியாக்கிய) - 250கிராம்
சர்க்கரை(வெல்லம் ) - 250 கிராம்
அப்பச்சோடா - 2 சிட்டிகை
கோதுமை மா(மைதா மா) - 2 மேசைக்கரண்டி(நிரப்பி)
பட்டர் - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)


செய்முறை 

ஒரு தட்டினை எடுத்து அதன் முழுப்பகுதிக்கும்
 நன்றாக பட்டரை பூசி வைக்கவும்.

பின்பு ஒரு உருளையை(பரோட்டா,
ரொட்டி, சப்பாத்தி தட்ட பயன்படுத்துவது)
எடுத்து அதன் மேல் முழுப் பகுதிக்கும்
பட்டரை நன்றாக பூசிவைக்கவும்.

பட்டரை நன்றாக பூசிய பின்பு அடுப்பில்
தாச்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும் .

தாச்சியை(வாணலியை)சூடானதும் அதில் சர்க்கரையை(வெல்லத்தை)போட்டு அதனை
கரண்டியால் இடை விடாது வறுத்து
கொண்டிருக்கவும்.

சர்க்கரை(வெல்லம் ) முழுவதும் இளகிபாகாக
வரத்தொடங்கியதும் அதனுள் ஒரு மேசை
க்கரண்டி பட்டர், ஆப்பச்சோடா ஆகியவற்றை
போட்டு நன்றாக கலக்கவும்.

எல்லாம் நன்றாக கலந்தபின்பு அதனுடன்
வறுத்து கோது நீக்கி தோல் உரித்து இரண்டாக
 உடைத்து வைத்திருக்கும் (இரண்டாக பிளந்த
 வெள்ளை முத்து) கச்சானை(நிலக்கடலை,
வேர்கடலை) கொஞ்சம் கொஞ்சமாக முழுவ
தையும் துவவும்.

கச்சான்(நிலக்கடலை, வேர்க்கடலை)முழுவதும்
 தூவி சேர்த்த பின்பு உடனடியாக அடுப்பிலிருந்து
 இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கியதை உடனடியாக பட்டர்
பூசிய தட்டில் போட்டு அதனை பட்டர் பூசிய
உருளையினால் நன்கு அழுத்தி பரப்பவும்.

அழுத்தி பரப்பியவுடன் உடனடியாக ஒரு கூரான
கத்தியால் 1" தர 1" அளவான துண்டுகளாக அதன்
மேல் நன்றாகவும் ஆழமாகவும் கீறவும்.

அதன் பின்பு அதனை நன்றாக ஆறவிடவும்.

•நன்றாக ஆறிய பின்பு சுவையான சத்தான
கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)அல்வா
 தயாராகிவிடும்.

தயாரான கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)
அல்வா துண்டுகளை பிரித்தெடுத்து ஒரு தட்டில்
வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர், கச்சான்(நிலக்கடலை,
வேர்க்கடலை)அலர்ஜி உடையவர்கள்,
இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
அடுப்பில் தாச்சியை (வாணலியை வைத்து
அதனை சூடாக்கி அதில் சிறிதளவு குருமணலை
போட்டு நன்றாக சூடாக்கவும், மணல் சூடானதும் கச்சானை(நிலக்கடலை,வேர்க்கடலை)
போட்டு நன்றாக வறுக்கவும். அல்லது
வறுத்த கச்சானை(நிலக்கடலை,வேர்க்கடலை)
கடையில் வாங்கவும், அதனை உடைத்து
 முத்துக்களை எடுக்கவும், பின்பு முத்துகளி
ல் காணப்படும் சிகப்புதோலை அகற்றவும்,
பின்பு முத்துகளின் நடுவில் இரண்டாக
பிளக்கவும்.


மாற்றுமுறை 
கச்சான்(நிலக்கடலை)பதிலாகஉடைத்த
 பாசிபயரிலும்(பாசி பருப்பிலும்)
செய்யலாம். பட்டருக்கு பதிலாக
மாஜரின் அல்லது நெய் விட்டு
செய்யலாம்.
சக்கரை(வெல்லத்திற்கு) பதிலாக
சீனி(சக்கரை) உபயோகிக்கலாம் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.