அவல் குழிப்பணியாரம்
அவல்குழிப்பணியாரம் செய்வதிற்கு
இலகுவானதும் சுவையானதும்
சத்துக்கள்உடையதுமான ஓர்
உணவாகும் .
தேவையான பொருட்கள்
அவல் - 1 /2கப்
சக்கரை(வெல்லம்) - 1 +1/2 கப்
துளாக்கிய ஏலக்காய் - 1 /4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - சுடுவதற்கு
செய்முறை
(1 )ஒரு பாத்திரத்தில் நன்றாக அரிசியை கழுவி
ஊறவைக்கவும்.
(2 )இன்னொரு பாத்திரத்தில் நன்றாக அவலை
கழுவி ஊற வைக்கவும்.
(3 )கிரைண்டரில்(மிக்ஸியில் )கழுவி ஊறவைத்த
இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக தண்ணீர்
விட்டு மெதுமையாக (நைசாக) அரைக்கவும்.
(4 )அதன் பின் அரைத்தவற்றுடன் சக்கரையையும்
(வெல்லத்தையும்) சேர்த்து அரைக்கவும்.
(5 )அரைத்த பின் இவற்றுடன் ஏலக்காய்த்தூளையும்
சேர்த்து கலக்கவும்.
(6)இவை யாவற்றையும் இட்லிமா பதத்திற்கு
கலக்க வேண்டும்.
(7)அதன் பின்னர் அடுப்பில் குழிப்பணியார சட்டியை
வைத்து சூடாக்கிய பின் அதில் நல்லெண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
(8)சூடாக்கிய பின்னர் அதன் ஒவ்வொரு குழியிலும்
முக்கால் பகுதியளவிற்கு அரைத்து கலந்து
வைத்திருக்கும் குழிப்பணியார மாவை ஊற்றவும்.
(9)குழிப்பணியார மாவை ஊற்றிய பின்னர் இதனை
வேக (அவிய )விடவும்.
(10)மாவின் அடிப்பகுதி நன்றாக வெந்ததும், குச்சி
அல்லது கரண்டியின் உதவியுடன் குழிப்பணியாறத்தை
திருப்பி விட்டு நன்றாக வேக விடவும்.
(11)குழிப்பணியாரம் நன்றாக வெந்ததும் மெதுவாக
எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும் .
(12)அதன் பின்னர் சுத்தமான சுவையான இனிப்பான
குழிப்பணியாரம் தயாராகிவிடும்.
(13)தயாரான பின்னர் ஒரு தட்டில் இனிப்பான
குழிப்பணியாறத்தை வைத்து பரிமாறவும் ,
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.