கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 30. Mai 2011

போஞ்சிக்காய் (பீன்ஸ்)பொரியல்

தேவையான பொருட்கள் 

போஞ்சிக்காய்(பீன்ஸ்)-500கிராம்  
வெங்காயம் -3
உள்ளி -அரைப்பாதி 
கீறிய பச்சைமிளகாய் -3
மிளகாய்த்தூள் -தேவையானளவு 
கடுகு - சிறிதளவு 
பெருஞ்சீரகம் - சிறிதளவு 
உப்பு - சிறிதளவு 
கருவப்பிள்ளை - சிறிதளவு 

செய்முறை 
1 .அடுப்பில் வாணலியினை வைத்து 
    சூடாக்கவும் 

2 .சூடாக்கிய பின்னர் அதில் சிறிதளவு
    எண்ணையை விட்டு சூடாக்கவும் .

3 .சூடாக்கிய பின்னர் அதில் கடுகை
    போட்டு வெடிக்கவிடவும் .

4 .கடுகு வெடித்த பின்னர் நறுக்கிய
    வெங்காயம்பெருஞ்சீரகம்(சோம்பு)
    உள்ளி (பூண்டு ) கீறிய பச்சை
    மிளகாய்  கருவப்பிள்ளை ஆகிய
    வற்றை போட்டுபொன் நிறமாக 
    தாளிக்கவும்.

5.தாளித்த பின்னர் அவற்றை ஒரு 
    பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

6.அதன் பின்னர் போஞ்சிக்காயை (பீன்ஸ்)
    ஓரளவு துண்டுகளாக வெட்டவும்.

7 .வெட்டிய பின்னர் அதனை ஒரு
    பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .

8 .அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
    (வாணலியை)வைத்து சூடாக்கிய
   பின்னர் அதில்  எண்ணையை விட்டு
   சூடாக்கவும் .

9 .சூடாக்கிய பின்னர் அதில் வெட்டிய 
    போஞ்சிகாயை(பீன்ஸ்) போட்டு
    கிளறி மூடி விடவும். 

10 .மூடிய சிறிது நேரத்தின் பின்னர் 
    திரும்பவும் முடியை திறந்து கிளறி 
    விடவும்  .
  
11 .அதன் பின்னர் இவற்றுடன் உப்பு,
    மிளகாய்த்தூள் ஆகியவற்றை 
     சேர்த்து கிளறி 5 நிமிடங்கள்
      மூடி விடவும் .
   (பச்சை வாடை போகும் வரை முடி 
   விடவும் )

12 . அதன் பின்னர் முடியை திறந்து 
       நன்றாக கிளறிவிடவும்

13 .கிளறிய பின்னர் இவற்றுடன் 
       தாளித்தவற்றை போட்டு நன்றாக 
       கிளறி சிறிது நேரம் முடிவைக்கவும் 

14. அதன் முடியை திறந்து மறுபடியும் 
       கிளறி அடுப்பில் இருந்து இறக்கி 
       வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

15 .அதன் பின்னர் சுத்தமான சுவையான 
      சத்தான போஞ்சிக்காய்(பீன்ஸ்)பொரியல்
      தயாராகிவிடும்

குறிப்பு 

1 .அடிக்கடி கிளறவும்.
2.மிளகாய்த்தூளின் பச்சைவாடை
   போகும் வரை மூடவும் 

எழுதியவர்
திருமதி சந்திரிக்கா தவராஜா(பிரான்ஸ்)
   

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.