கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 2. Juni 2011

கரகரப்பான இன்ஸ்டன்ட் சீடை

செய்வதற்கு இலகுவானதும், சுவையானதும், 
மினரல் கார்போவைதரேட் பொஸ்பரஸ் 
பொட்டாசியம் கல்சியம் கொழுப்பு ஆகிய 
சத்துகள் நிறைந்ததுமான ஓர் சிற்றுண்டியே 
கரகரப்பான இன்ஸ்டன்ட் சீடையாகும் இதனை 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி 
உண்பார்கள் 

தேவையானபொருட்கள் 
அரிசி மா - 200 கிராம்
வறுத்த மைதாமா(கோதுமைமா) - 50 கிராம்
நறுக்கியபச்சைமிளகாய் - 5
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் சோடா - சிறிதளவு
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் -தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் அரிசிமா, வறுத்த 
மைதாமா 
   (கோதுமைமா)நறுக்கிய பச்சைமிளகாய் பெருங்காயம், 
   சமையல்சோடா பொட்டுக்கடலை உப்பு தண்ணீர் 
  ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

2.பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு 
  பாத்திரத்தில் வைக்கவும். 

3.அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
  (வாணலியை)வைத்து அதை சூடாக்கவும்.

4.அது சூடானதும் அதில் எண்ணெயை 
   ஊற்றி கொதிக்கவிடவும். 

5.எண்ணெய் கொதித்ததும் அதில் உருட்டிய 
சீடைகளை போட்டு பொரிக்கவும்.

6.சீடைகள் பொரிந்ததும் சுத்தமான சுவையான 
   கரகரப்பான இன்ஸ்டன்ட் சீடை  தயாராகிவிடும். 

7.அதை ஒரு தட்டில் போட்டு பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும், எண்ணெய் 
கொதித்ததும் அதில் உருட்டிய சீடைகளை 
போட்டு கரகரப்பாக பொரிக்கவும்.

எச்சரிக்கை- 
இருதய நோயாளர், சர்க்கரை நோயாளர் 
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.