கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 28. Juli 2011

சோயாமுளைமுட்டை வறுவல்

சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட
ஒரு அவரை இனத்தாவரம் ஆகும்.அத்துடன் இது
ஆண்டுத்தாவரமாகும் இது 5,000 ஆண்டுகளுக்கு
மேலாக சீனநாட்டுமக்களின் உணவாகவும்அத்துடன்
மருந்துகளிற்காகவும்பயன்பட்டு வருகின்றது.சோயா
மனிதனுக்குத் தேவையானஎல்லா அமினோ அமிலங்
களையும் குறிப்பிடத்தக்களவில்கொண்டிருப்பதனால்,
இது புரதச்சத்துக்கான சிறந்தமூலமாகஉள்ளது.சோயா
வில் பல உணவுப்பொருள்கள் தயாரிக்கப்படுகிறன
அவற்றுள் பால் பொருட்களுக்கான மாற்றுஉணவுப்
பொருள்களும் அடங்கும்.அத்துடன் சோயாவில்
கொழுப்பு சத்து,மக்னீசியம்,கலியம்,கல்சியம்,உயிர்சத்து B1,B2,B3,B5,B6,B9.C,E,K1,நீர்சத்து,சிங்த்து,காபோவைத
ரேற்று,இரும்புசத்து,பொஸ்பேற்று ஆகியசத்துக்கள்
அடங்கியதுஇப்படிப்பட்ட சோயாவை முளைக்கவிட்டு
அதில் மற்றைய பொருட்களை சேர்த்து செய்யப்படும்
சோயாமுளைமுட்டை வறுவல் சுத்தமான சுவையான
சத்தானதுமாகும்
தேவையான பொருட்கள்
சுத்தமாக்கிய சோயா முளைகள்- 100கிராம்
மிளகாய்த்தூள்- தேவையானளவு
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
மாசி -சிறிதளவு (விரும்பினால்)
இறால் கருவாடு - சிறிதளவு (விரும்பினால்)
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
முட்டை- 1
தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

செய்முறை

(1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சுடாக்கவும்.

(2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
சுடாக்கவும்

(3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
    (4)தாளித்த பின்னர் அதில்சோயா முளைகள்,மாசி,
    இறால் கருவாடு ,மிளகாய்த்தூள் ஆகியவற்றை
    போட்டு மூடி (2-3)நிமிடங்கள் அவியவிடவும்
      (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
      வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
      வேண்டாம்).
        (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
        ,உப்பு, தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்)ஆகிய
        வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்குகிளறி
        இறக்கவும்.
          (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
          சத்தான சோயா முளை முட்டை வறுவல்
          தயாராகிவிடும்.

          (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
          ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

          (9)பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்),
          இடியப்பம்,புட்டு அல்லது பாண்
          ஆகியவற்றில் ஒன்றை வைத்து
          அதனுடன் சுத்தமான சுவையான
          சத்தான சோயா முளை முட்டை
          வறுவலைவைத்து பரிமாறவும்.

          Keine Kommentare:

          Kommentar veröffentlichen

          Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.