கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Juli 2011

யாழ் கூழ்

தேவையான பொருட்கள்
ஒடியல் மா - 100 கிராம்
(சுத்தம் செய்தது) இறால் - 100 கிராம்
பாதியாக உடைத்த  நண்டு - 8
மீன்தலை - 1
புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி
பயிற்றங்காய் - 10
புளி - ஒரு சின்ன உருண்டை
பலாக்கொட்டை - 100 கிராம்
சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
நற்சீரகம் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை

ஒடியல் மாவை அரிதட்டினால் நன்றாக
     அரிக்கவும் 

அதன் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து 
நன்றாக கழுவி வைக்கவும்.

பின்னர் அம்மியில் கிரைண்டரில் மஞ்சள், 
மிளகு, சின்னசீரகம் ,செத்தல்மிளகாய்
ஆகியவற்றில் சிறிதளவை எடுத்து 
நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து
    ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின் நன்றாக கழுவிய அரிசி ,பயிற்றங்காய், 
பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு
ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு 
வேகவிடவும்.

வெந்த பின்னர் அதனுடன் மீன்தலை, நண்டு, 
இறால் ஆகியவற்றையும் பானைக்குள் 
போடவும்.


இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் 
உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் 
இறக்கவும்

இப்போது சுத்தமான சுவையான சத்தான  
யாழ்கூழ் தயாராகிவிடும்

பின்னர் கூழ் குடிக்கும் பாத்திரத்தில் 
ஊற்றி பறிமாறவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.