கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 29. Juli 2011

குமளவடை

இலங்கையில் உள்ள கண்டி மாநகரத்தில்
உள்ள சிங்களமக்கள் தங்களுடைய புதிய
வருட தினத்தன்று முக்கியமாக இந்த
வடையை செய்து தங்களுடைய உறவினர்
நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்
அத்துடன் இது காபோவைதரேற்று,இனிப்பு&
சத்து நிறைந்த உணவாகும்
தேவையான பொருட்கள்
பச்சைஅரிசி-1சுண்டு
சவ்வரிசி(ஜவ்வரிசி)-சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
எண்ணெய்-தேவையானளவு
நிறங்கள் -விரும்பியது
சீனிப்பாகு -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கொதித்ததண்ணீர்-தேவையானளவு
செய்முறை
(1)ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை
போட்டு இரண்டு மணித்தியாலம்
ஊறவிடவும்


(2)ஊறவிட்ட அரிசியை உரலில் அல்லது
கிரைண்டரில் போட்டு மாவாக இடிக்கவும்


(3)இடித்த மாவை ஒரு பாத்திரத்தில்(ஸ்டீமரில்
அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில்)
போட்டு நன்றாக அவிக்கவும்


(4)அவித்த பின்னர் அதனை அரிதட்டினால்
அல்லது சல்லடையினால் நன்றாக அரிக்கவும்


(5)அரித்தமாவுடன்மஞ்சள் தூள்,உப்பு கொதித்த
தண்ணீர்,சிறியதுளிவிரும்பியநிறங்கள் ஆகிய

வற்றைபோட்டு நன்றாக குழைக்கவும்
.



(6)குழைத்த பின்னர் அதனை ஓரளவு
மெல்லியதாவும் சிறிய வட்டமாகவும்
ரொட்டி போலவும் தட்டவும்.


(7)தட்டிய பின்னர் அதனை சவ்வரிசி
(ஜவ்வரிசி)யில்போட்டு நன்றாக
பிரட்டவும்.


(8)பிரட்டிய பின்னர் அடுப்பில் தாட்சியை
அடுப்பில் வைத்து சூடாக்கி அதில்
எண்ணையைவிட்டு இளம் சூட்டில்
கொதிக்கவிடவும்.


(9)இளம் சூட்டில் எண்ணெய் கொதித்த
பின்னர் அதில் தட்டி சவ்வரிசி(ஜவ்வரிசி)
யில் பிரட்டிய வடையை போட்டு
பொரிக்கவும்


(10)வடை பொரிந்த பின்னர் அவற்றை
ஒரு பாத்திரத்தில் போடவும்,


(11)விரும்பினால்சீனி(சக்கரை)பாகில்
போட்டு ஊறவிடலாம்.


(12)அதன் பின்னர் ஒருதட்டில் தேவையான
வடைகளை வைத்து பரிமாறவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.