பலரால் விரும்பி உண்ணப்படும்
சுத்தமான சுவையான சத்துக்கள்
நிறைந்தமொறு மொறுப்பான
கடலை (மசால)வடையின்
சுவையை சாப்பிட்டு பார்த்து
அறியவும்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1சுண்டு
பயித்தம்பருப்பு- 1பிடி
ஜவ்வரிசி- 1பிடி
சிறிதாக வெட்டியவெங்காயம் -சிறிதளவு
சிறிதாக வெட்டியபச்சைமிளகாய் -சிறிதளவு
சிறிதாக வெட்டியகறிவேப்பிலை-சிறிதளவு
எண்ணைய் -தேவையானளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை
ஒரு மணித்தியாலம் ஊறவைக்கவும்.
2.இன்னொரு பாத்திரத்தில் ஒரு பிடி
ஜவ்வரிசியையும், ஒரு பிடி பயித்தம்
பருப்பையும் கலந்து அரை மணித்தி
யாலம்ஊறவைக்கவும்.
3.இவையாவும் ஊறிய பின்னர்
கிரைண்டரில்(மிக்ஸியில்)கடலைப்
பருப்பை போட்டு மசால வடைக்கு
ஏற்ற பதத்தில் அரைக்கவும்.
4.அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு
பாத்திரத்தில் போடவும்.
5.அதன் பின்னர் ஊறிய ஜவ்வரிசியையும்
ஊறிய பயித்தம்பருப்பையும் பிழிந்து
விட்டு அரைத்த கடலைப்பருப்பு போட்ட
பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.
6.கலந்த பின்னர் அதனுடன் சிறியதாக
வெட்டிய பச்சைமிளகாய் சிறியதாக
வெட்டிய வெங்காயம் சிறியதாக
வெட்டிய கறிவேப்பிலை,உப்பு ஆகியன
வற்றை நன்றாக கலக்கவும்.
7.அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து சூடாக்கவும்.
8.சூடாக்கிய பின்னர் அதில் எண்ணையை
விட்டு சூடாக்கவும்.
9.எண்ணைய் சூடான பின்னர் அரைத்து
கலந்து வைத்துள்ள மாவில் இருந்து
சிறிதளவை எடுத்து வட்டமாக தட்டி
எண்ணையில் போட்டு பொனிறமாக
பொரிக்கவும்.
10.வடை பொன்னிறமாக பொரிந்த
பின்னர் சுத்தமான சுவையான சத்தான
மொறு மொறுப்பான கடலை (மசால)
வடை தயாராகிவிடும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.