கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 31. August 2011

உருளைக்கிழங்கு ரோஸ்ட் -1

சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட் கார்போவைதரேற்று நிறைந்த ஒர் உணவு ஆகும்.அத்துடன் சிறுவர் முதல் வயோதிபர் வரை இலகுவாக உண்ணக்கூடிய ஓர் உணவாகும் .

 தேவையான பொருட்கள் 
 வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
பாண் - 2 துண்டு
 தேசிக்காய் சாறு - ஒரு தேக்கரண்டி
 மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

 செய்முறை 
 1 )ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பாண், தேசிக்காய்சாறு, மிளகுத்தூள்,மிளகாய்த்தூள்,கரம்மசாலாத் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்-

 2 )போட்ட பின்னர் அவை யாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஓரளவு நன்றாக குழைக்கவும்(பிசையவும் ).

 3) ஓரளவு நன்றாக பிசைந்த(குழைத்த) பின்னர் அவற்றை தட்டி சிறு சிறு துண்டுகளாக்கவும்.

 4 ) அதன் பின்னர் அடுப்பில் தோசைக் கல்லினை வைத்து சூடாக்கவும்.

 5 )சூடாக்கிய தோசைக்கல்லில் சிறிது அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

 6 )எண்ணெய் சூடானதும் குழைத்து சிறு சிறு துண்டுகளாக்கிய மாவை சூடான தோசைக்க்கல்லில் போட்டு நன்றாக ரோஸ்ட் போல செய்யவேண்டும்.

 7 )நன்றாக ரோஸ்ட் போல செய்த பின்னர் இவற்றை தோசைக்கல்லில் இருந்து வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

 8 )இப்போது சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயாராகி விட்டது.

 9 )அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட்டினை வைத்து பரிமாறவும்.

 குறிப்பு 

 (1) இதை செய்தவுடன் சுட சுட சாப்பிட்டால் இதன் சுவையே தனியானது . 

(2)இதை பணிஸின்(Bun) உள்ளே வைத்துச் சாப்பிடலாம்.

 (3)இதை சர்க்கரை நோயாளர் மாரடைப்பு (இருதய) நோயாளர் வைத்தியரின் ஆலோசனையுடன் உண்ணலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.